பயத்தில் ஊரைக் காலி செய்த ஷ்ருதிஹாசன்

பயத்தில் ஊரைக் காலி செய்த ஷ்ருதிஹாசன்

1 mins read
1b844882-916f-4a48-9373-011cd391dc6e
மும்பையில் குடியிருந்த நடிகை ஸ்ருதி ஹாசன், கொரோனா கிருமித்தொற்று அச்சம் காரணமாக அங்கிருந்து ஹைதராபாத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டாராம். படம்: ஊடகம் -

தமி­ழ­கம் உள்­பட நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக் கொண்டே போகிறது. இந்­நி­லை­யில் நடி­கை­ ஷ்ரு­தி­ஹா­சன் மும்­பை­யில் இருந்த தனது வீட்­டைத் திடீ­ரென காலி செய்­து­விட்டு வேறு ஊருக்­குச் சென்­று­விட்­டார் என்­பது பல­ரை­யும் ஆச்­ச­ரி­யத்­தில் ஆழ்த்­தி­யி­ருக்­கிறது.

ஸ்ரு­தி­ஹா­சன் கடந்த சில ஆண்­டு­க­ளாக மும்­பை­யில் இருந்துகொண்டே தமிழ், இந்தி மற்­றும் தெலுங்கு படங்­களில் நடித்­துக்­கொண்­டி­ருந்­தார். இந்த நிலை­யில் மும்­பை­யில் தற்­போது கொரோனா கிரு­மித் தாக்­கம் மிக அதி­க­மாக உள்­ளது. அதனை அடுத்து உட­ன­டி­யாக அவர் மும்பை வீட்டை காலி செய்­து­விட்டு சென்­னை­யில் குடி­யேற முடி­வெ­டுத்­தார்.

ஆனால், மும்­பை­யைப்­போல் சென்­னை­யி­லும் கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்பு அதி­க­மாக இருப்­ப­தால் அவர் ஹைத­ரா­பாத்தை தேர்வு செய்து அங்கு சென்­று­விட்­டார். அங்கு அவர் ஒரு வீட்டை வாட­கைக்கு எடுத்து தங்கி இருக்­கி­றார்.

தற்­பொ­ழுது பவன் கல்­யா­ணு­டன் நடிக்­கும் படத்­தி­லும் ரவி தேஜா­வு­டன் நடிக்­கும் படத்­தி­லும் ஷ்ருதி­ஹா­சன் நடித்­துக் கொண்டு வரு­வ­தால் அவர் ஹைத­ரா­பாத்­தில் இருந்து கொண்டே படப்­பி­டிப்­புக்கு செல்­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விஜய்­சே­து­ப­தி­யு­டன் ஷ்ரு­தி­ஹா­சன் நடித்து வரும் 'லாபம்' என்ற தமிழ்ப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு கொரோ­னா­வால் நிறுத்­தப்­பட்டு உள்­ளது. அதன் படப்­பி­டிப்பு மீண்­டும் தொடங்­கும்­போது அவர் ஹைத­ரா­பாத்­தி­லி­ருந்து சென்னை வரு­வார் என்று எதிர்­பார்க்­கப்

­ப­டு­கிறது.