பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லோகேஷ்

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லோகேஷ்

2 mins read
49724545-07bd-4ab0-bf26-f7b1f19e1cca
நடிகர் விஜய் சேதுபதி லோகேஷை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரிக்கிறார். -

'ஆதித்யா' தொலைக்காட்சியின் `மொக்கை ஆஃப் தி டே' நிகழ்ச்­சி­யின் மூலம் பிர­ப­ல­மான லோகேஷ், `நானும் ரெள­டி­தான்', `ஜாம்பி' எனப் பல படங்­களில் நடித்­தி­ருக்­கி­றார்.

கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்­னர் இவர் பக்­க­வா­தத்­தால் பாதிக்­கப்­பட்­டார் என்­கிற செய்தி பல­ரை­யும் அதிர்ச்­சி­யில் ஆழ்த்­தி­யது. தனது முதல் அறுவை சிகிச்­சையை முடித்­து­விட்டு, தற்­போது உடல் நலம் தேறி­ வ­ரு­கி­றார்.

அவர் உடல்­ந­லம் பற்றி கூறு­கை­யில், "நண்­பர்­க­ளோடு வெளி­யில் சென்­று­விட்டு இரவு வீட்­டிற்­குத் திரும்­பி­னேன். அது­வ­ரைக்­கும் எனக்கு எந்­தப் பிரச்­சி­னை­யும் இல்லை. வீட்­டிற்கு வந்­த­ பி­றகு கைத்தொலை­பே­சியை எடுக்­கும்­போது சரி­யா­கப் பிடிக்க முடி­யா­மல் கீழே விழுந்­தது. எனக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை. பின் படுத்­து­விட்­டேன்.

"காலை­யில் எழுந்­த­போ­து­தான் இடது காலும் கையும் செயல் இழந்து போனது தெரி­ய­வந்­தது. எனக்கு இரத்த அழுத்­தம் இருந்­தி­ருக்­கிறது. இது எனக்கு அது­வரை தெரி­யாது.

"அதன்­பி­றகு அறுவை சிகிச்சை முடிந்து 10 நாள் வரை­யும் எனக்கு என்ன நடந்­தது என்று தெரி­யாது. என் மூளை­யில் ரத்­தக்­கட்டு ஏற்­பட்­ட­தால் மண்டை ஓட்டை வெட்டி அறுவை சிகிச்சை செய்து இருக்­கி­றார்­கள். அந்த ஓட்டை மீண்­டும் அறுவை சிகிச்சை மூலம் மண்­டை­யில் வைக்­க­வேண்­டும். அத­னால்­தான் நான் இன்­னும் மருத்­து­வ­ம­னை­யில் இருக்­கி­றேன்.

"மருத்­துவ செல­வுக்கு சிவ­கார்த்­தி­கே­யன், விஜய் சேது­பதி, ஆதித்யா தொலைக்­காட்சி நிர்­வா­கம், நண்­பர்­கள் உதவி செய்­தார்­கள். என்­னைப் பார்க்க சோக­மாக வந்த விஜய் சேது­பதி அண்­ணாவை நான் சிரிக்க வைத்து அனுப்­பி­னேன்.

"இந்­தச் சம்­ப­வத்­தில் இருந்து நான் கத்­துக்கொண்ட விஷ­யம் என்­ன­வென்­றால் நம் வாழ்க்­கை­யில் எப்­போது வேண்­டு­மா­னா­லும் எது­வும் நடக்­க­லாம். அடுத்த நிமி­ஷம் நிச்­ச­யம் இல்­லாத வாழ்க்கை என்று புரிய வைத்­தது.

"முதல் நாள் இரவு கைகள் தொலை­பே­சியை பிடிக்க முடி­யா­மல் போன­போதே நான் சுதா­ரித்­துக்­கொண்டு மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றி­ருந்­தால் இந்த அள­விற்கு ஆகி­யி­ருக்­காது. அனை­வ­ரும் அவ­ர­வர் உடல்­ந­லத்­தைக் கவ­னித்­துக்­கொள்­ளுங்­கள். ரத்த அழுத்­தம் அமை­தி­யாக இருந்து மனி­தரை சாய்த்­து­வி­டும் என்­பதை அனை­வ­ரும் அறிந்­து­கொள்­ள­வேண்­டும்," என்­றார் லோகேஷ்.