ஈஸ்வர் கார்த்திக்: அனுபவம் இல்லாதவரை நம்ப தைரியம் வேண்டும்

ஈஸ்வர் கார்த்திக்: அனுபவம் இல்லாதவரை நம்ப தைரியம் வேண்டும்

2 mins read
5eb87ba9-edd8-4b54-b8ae-ac87502ca506
ஈஸ்­வர் கார்த்­திக் இயக்கியுள்ள 'பென்குயின்' படத்தில் நடித்துள்ளார் கீர்த்தி சுரே‌ஷ். இப்படம் வரும் 19ஆம் தேதி, இணை­யம் மூலம் வெளி­யா­கிறது. படம்: ஊடகம் -

'கீர்த்தி சுரேஷ் நடிக்க, ஈஸ்­வர் கார்த்­திக் இயக்­கி­யுள்ள 'பென்கு­யின்' படம், இம்­மா­தம் 19ஆம் தேதி, இணை­யம் மூலம் வெளி­யா­கிறது. இயக்­கு­நர் இது­வரை எந்த இயக்­கு­ந­ரி­ட­மும் பணி­யாற்­றியதில்லை. அது­போல் குறும்­ப­டம் உள்­ளிட்ட எந்­தப்­ப­ட­மும் இயக்­கி­ய­தும் இல்லை. அந்த வகை­யில், 'பெண்­கு­யின்' படம் இயக்­கு­ந­ருக்கு முதல் படம் என்றே சொல்­லாம்.

படம் குறித்து இயக்­கு­நர் கூறும்­போது, "பெண்­கு­யின்' நாய­கிக்­கான கதை­யா­கத்­தான் எழு­தி­னேன். சாதா­ரண பெண். அசா­தா­ரண சூழ­லில் சிக்­கி­னால், என்ன நடக்­கும் என்­பதே படத்­தின் கதை. கதையைக் கேட்­ட­துமே கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்­புக் கொண்­டார். தாய், மகன் பாசம்­தான் கதை­யின் உயிர். படப்­பி­டிப்பு முடி­யும் வரை, முக­மூடி மனி­தர் யார் என்­பது குறித்து, படக்­கு­ழு­வி­ன­ருக்கு கூட தெரி­யாது.

"கார்த்­தி­கே­யன் சந்­தா­னம் கதை­யைக் கேட்ட பிறகு, உடனே தயா­ரிக்க ஒப்­புக் கொண்­டார். விஜய் சேது­பதி, கார்த்­தி­கே­யன் சந்­தா­னம் இரு­வ­ருமே என் திரை­யு­லக வாழ்க்­கைக்கு மிக­வும் முக்­கி­ய­மா­ன­வர்­கள். எந்­த­வொரு அனு­ப­வ­மும் இல்­லா­மல் வரு­ப­வரை நம்­பு­வ­தற்கு, ஒரு தைரி­யம் வேண்­டும். அது இவர்­க­ளுக்கு இருக்­கிறது," என்றார்.

இந்­தப் படத்­தின் முன்­னோட்­டக் காட்­சி­யைப் பார்த்த நடி­கர் சூரி தனது டுவிட்­டர் பக்­கத்­தில், "தங்­கச்சி முன்­னோட்­டக் காட்சி சிறப்பு. நடிப்பு அதை­விட சிறப்பு. அடுத்த

விரு­துக்கு தயா­ரா­கி­விட்­டீர்­கள் என்று நினைக்­கி­றேன்," என்று பதி­விட்டு இருக்­கி­றார். அதற்கு கீர்த்தி சுரேஷ், "அண்ணா மிக மிக நன்றி," என்று பதி­விட்டு இருக்­கி­றார்.

கீர்த்தி சுரேஷ் 'சாவித்­திரி' படத்­தில் தத்ரூபமாக நடித்ததற்கு பல விரு­து­களை வாங்­கி­யி­ருந்­தார் என்­பது குறிப்­பி­டத்தக்­கது.