அதிதி ராவ்: உதவி தேவைப்படுவோருக்கு இயன்றதைச் செய்வோம்

அதிதி ராவ்: உதவி தேவைப்படுவோருக்கு இயன்றதைச் செய்வோம்

2 mins read
d06f290d-2b3e-4cf1-a022-47ac35f04049
அதிதி ராவ். படம்: ஊடகம் -

சத்­த­மின்றி 23 படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கிறார் அதிதி ராவ். தற்­போது ஹைத­ரா­பாத்­தில் வசிப்­ப­வர், கொரோனா ஊர­டங்கு எப்­போது முடி­வுக்கு வரும் என ஆவ­லாக காத்­துக் கிடக்­கி­றா­ராம்.

அண்­மைய பேட்டி ஒன்­றில் பல்­வேறு மொழிப் படங்­களில் நடித்த அனு­ப­வங்­கள், மணி­ரத்­னம் உள்­ளிட்ட பெரிய இயக்­கு­நர்­க­ளின் படங்­களில் நடித்­த­தன் மூலம் கற்­றுக்­கொண்ட விஷ­யங்­கள் குறித்து விவ­ரித்­துள்­ளார் அதிதி.

"இவர்­க­ளது படங்­களில் நடிக்­கும்போது படக்­கு­ழு­வில் எந்­த­வி­த­மான ஏற்­றத் தாழ்­வு­களும் இருக்­காது. படக்­கு­ழு­வில் நாமும் ஒரு­வர், அவ்­வ­ள­வு­தான். நமக்­கும் ஒரு வேலை­யைத் தந்­தி­ருப்­ப­தால் அங்கு இருக்­கி­றோம். குறிப்­பிட்ட கதைக்கு அல்­லது காட்­சிக்கு நாம் தேவைப்­ப­டு­கி­றோம். மாறாக நாம் நம்மை மட்­டுமே தனித்து அடை­யா­ளம் காண முடி­யாது," என்­கி­றார் அதிதி ராவ்.

சில இயக்­கு­நர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும் போது படக்­கு­ழு­வி­னர் ஒரே குறிக்­கோ­ளு­டன் வேறு எது­கு­றித்­தும் யோசிக்­கா­மல் வெறித்­த­ன­மாக பணி­யாற்­று­வ­தைக் கண்டு பிர­மித்­துப் போயி­ருப்­ப­தாக குறிப்­பி­டு­ப­வர், தென்னிந்­திய மொழிப் படங்­களில் நடித்த அனு­ப­வத்தை எந்­நா­ளும் மறக்க இய­லாது என்­கி­றார். "பல்­வேறு இந்­திய மொழி­களில் நடிப்­ப­தன் மூலம் இந்­திய நடிகை என்று பெய­ரெ­டுக்­கவே விரும்­பு­கி­றேன். ஆனால் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளிவந்த 'காற்று வெளி­யிடை' படத்­துக்­குப் பிறகு தென்­னிந்­திய படங்­களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்­க­வில்லை.

ஒரு நடிகை என்ற வகை­யில் ஒரு கதை­யைக் கேட்­கும் போது அது என்ன மாதி­ரி­யான உணர்வை என்­னுள் ஏற்­ப­டுத்­து­கிறது என்­ப­தையே முக்­கி­ய­மாக கரு­து­கி­றேன். ஒரு திரைப்­ப­டத்தை திரை­ய­ரங்­கில் பார்த்­து­விட்டு வெளி­யே­றும்போது முரண்­பட்ட ஒரு கருத்து மன­தில் ஏற்­பட்­டி­ருக்க வேண்­டும். அல்­லது திருப்­தி­யாக உணர வேண்­டும். ஓர் இயக்­கு­நரோ கதா­பாத்­தி­ரமோ அத்­த­கைய உணர்வை ரசி­கர்­கள் மன­தில் ஏற்­ப­டுத்த வேண்­டும். உண்­மை­யில் இத்­த­கைய படங்­களில் தான் நடிப்­பேன் என்று நான் எந்­த­விதமான நிபந்­த­னை­யும் விதிப்­ப­தில்லை. வணி­கப் படங்­களில் நடிக்க வேண்­டும் என்று ஆர்­வத்­து­டன் காத்­துக் கிடக்­கி­றேன்," என்­கி­றார் அதிதி ராவ்.

ஊர­டங்கு வேளை­யில் எப்­படி பொழுது போக்­கு­கி­றீர்­கள்?

"நிறைய யோசிக்­கி­றேன். ஒரு நடி­கை­யாக எனக்கு எல்­லாம் கிடைத்­தி­ருக்­கிறது. அதை நினைத்து திருப்தி அடை­கி­றேன். எனி­னும் சில சம­யங்­களில் எனக்­கும் கவலை ஏற்­படும். அப்­போ­தெல்­லாம், 'உனக்கு என்ன பிரச்­சினை... உனக்­கு­தான் எல்­லாம் இருக்­கி­றதே' என்று எனக்கு நானே சொல்­லிக் கொள்­வேன்.

"ஆனால் திருப்­தி­யு­ட­னும் நன்­றி­யு­ட­னும் இருப்­ப­தை­யும் மீறி நமக்­கென சில கட­மை­கள் காத்­தி­ருக்­கின்­றன. நம்­மு­டைய பணம், நேரம், உழைப்பு, முயற்சி ஆகிய அனைத்­தை­யும் ஒருங்கே செலுத்தி ஏழை­க­ளுக்­கும் உதவி தேவைப்­ப­டு­கி­ற­வர்­க­ளுக்­கும் நம்­மால் இயன்­ற­தைச் செய்ய வேண்­டும்," என்று சொல்­லும் அதிதி ராவ், தற்­போது மலை­யா­ளத்­தில் 'சுஃபியும் சுஜா­தா­யும்' என்ற படத்­தில் நடித்து முடித்­துள்­ளார். இப்­ப­டம் விரை­வில் திரை காண்­கிறது.