'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு' படம் வெளியாகி ஓராண்டு ஆகிவிட்டது. அந்த வகையில் ஜூன் 14ஆம் தேதி தன் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் என சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் அப்படத்தின் நாயகன் ரியோ ராஜ்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் இது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் ரியோ.
"நான் அறிமுகமான திரைப்படம், அருமையான இயக்குநர், அற்புதமான தயாரிப்பாளர் ஆகியோருடன் அழகான ஒரு குடும்பத்தையும் எனக்குத் தந்துள்ளது.
"என்றுமே சிவா அண்ணாவுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அவர் இன்றி எனது சினிமா கனவு சாத்தியமாகி இருக்காது. சீக்கிரமே இன்னொரு படம் பண்ணுவோம்," என்று குறிப்பிட்டுள்ளார் ரியோ.

