சுஷாந்த் மரணம்: சல்மான்கான் உட்பட 8 பேர் மீது புகார்

சுஷாந்த் மரணம்: சல்மான்கான் உட்பட 8 பேர் மீது புகார்

1 mins read
f82a14f0-adfc-4aeb-9457-322a38c06ab4
இந்தி நடி­கர் சுஷாந்த் சிங் தன் உயிரை மாய்த்­துக் கொண்­ட­து தொடர்­பாக நடி­கர் சல்­மான் கான், கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்­சய் லீலா பன்­சாலி உள்­ளிட்ட 8 இந்­தித் திரை­யு­லக பிர­ப­லங்­கள் மீது வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும் என வழக்­க­றி­ஞர் சுதீர் குமார் என்­ப­வர் வழக்கு தொடுத்­துள்­ளார். படம்: ஊடகம் -

மும்பை: சக நடி­கர்­கள் தம்மை புறக்­க­ணித்­த­தா­லும் புதுப்­பட வாய்ப்பு­கள் தடுக்­கப்­பட்­ட­தா­லும்தான் இளம் இந்தி நடி­கர் சுஷாந்த் சிங் தன் உயிரை மாய்த்­துக் கொண்­ட­தாக புகார் எழுந்­துள்­ளது.

இது தொடர்­பாக நடி­கர் சல்­மான் கான், கரண் ஜோஹர், ஏக்தா கபூர், சஞ்­சய் லீலா பன்­சாலி உள்­ளிட்ட 8 இந்­தித் திரை­யு­லக பிர­ப­லங்­கள் மீது வழக்­குப் பதிவு செய்ய வேண்­டும் என வழக்­க­றி­ஞர் சுதீர் குமார் என்­ப­வர் வழக்கு தொடுத்­துள்­ளார்.

இதை­ய­டுத்து இந்த எட்டு பேருக்­கும் எதி­ராக சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மா­னோர் பதி­விட்டு வரு­கின்­ற­னர். மேலும் பாட்னா உள்­ளிட்ட சில நக­ரங்­களில் சல்­மான் கான், கரண் ஜோஹ­ரின் உருவ பொம்­மை­கள் எரிக்­கப்­பட்­டன.