லண்டன் 'சண்டக்காரி' வேடத்தில் ஸ்‌ரேயா

லண்டன் 'சண்டக்காரி' வேடத்தில் ஸ்‌ரேயா

2 mins read
2c7322dd-bdaf-4864-9255-b17f11f0c3bd
முதன்முறையாக விமலுடன் இணைந்து சண்டக்காரி படத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரேயா. படம்: ஊடகம் -

மாதேஷ் இயக்­கத்­தில் உரு­வாகி வரு­கிறது 'சண்­டக்­காரி'. விம­லும் ஸ்ரே­யா­வும் முதன்­மு­றை­யாக ஜோடி சேர்ந்­துள்­ள­னர்.

கதைப்­படி லண்­ட­னில் மிகப்­பெரிய கணினி நிறு­வ­னம் ஒன்றை நடத்தி வரு­ப­வர் ஸ்ரேயா. அவ­ரது நிறு­வ­னத்­தில் கணினி நிபு­ண­ரா­கப் பணி­யாற்­று­கி­றார் விமல். இரு­வ­ருக்­கும் இடை­யே­யான விஷ­யங்­கள்­தான் கதை.

"ஒரு நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ள­ராக கம்­பீ­ர­மான, அதே­ச­ம­யம் நவ­நா­க­ரி­க­மான நாயகி என்­ற­வு­டன் என் மன­தில் முத­லில் தோன்­றி­ய­வர் ஸ்ரே­யா­தான்," என்­கி­றார் மாதேஷ்.

இவர் சங்­கர் இயக்­கிய 'முதல்­வன்', 'சாக்­லேட்', 'மதுர' ஆகிய படங்­க­ளைத் தயா­ரித்­த­வர். திரிஷா நடிப்­பில் வெளி­யான 'மோகினி'யை இயக்­கி­ய­வர்.

இந்­தப் புதுப்­ப­டத்­தின் கதையை ஸ்ரே­யா­வி­டம் விவ­ரித்­த­போது தம்­மால் இப்­ப­டி­யொரு கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க இய­லுமா? என்று அவர் சந்­தே­கம் எழுப்­பி­னா­ராம்.

"நான் இயல்­பா­கவே மிக­வும் மென்­மை­யா­ன­வள். எந்­தப் படத்­தி­லும் பெரும் கோபக்­கா­ரி­யா­கவோ, அள­வுக்கு மீறிய திமி­ரான பெண்­ணா­கவோ நடித்­த­தில்லை. என்னை நம்பி இப்­ப­டி­யொரு கோபக்­கா­ரி­யான கதா­பாத்­தி­ரத்தை ஒப்­ப­டைக்­கி­றீர்­களே என்று ஸ்ரேயா சந்­தே­கத்­து­டன் கேட்­டார். அவரை சமா­தா­னப்­படுத்தி நடிக்க வைத்­தோ­ம். நான் எதிர்­பார்த்­ததைவிட மிகச் சிறப்­பாக நடித்­தி­ருக்­கி­றார் ஸ்ரேயா.

"படத்­தில் பழம்­பெ­ரும் நடிகை கே.ஆர். விஜயா, பிரபு சார், உமா பத்­ம­னா­பன், ரேகா, சத்­யன் என்று நிறைய அனு­பவ நடி­கர்­கள் உள்­ள­னர். ஒரு பாட்டி கதா­பாத்­தி­ரத்­தில் கே.ஆர். விஜயா மேடம் நடித்­தி­ருக்­கி­றார். நீண்ட இடை­வெ­ளிக்­குப் பிறகு முக்­கி­யத்­து­வம் உள்ள கதா­பாத்­தி­ரத்­தில் நடித்­த­தில் அவ­ருக்­கும் ரொம்ப மகிழ்ச்சி," என்று சொல்­லும் மாதேஷ் பெரும்­பா­லான காட்­சி­களை லண்­ட­னில்­தான் பட­மாக்கி உள்­ளார்.

தமி­ழக கிரா­மத்­தில் நடக்­கும் சில சம்­ப­வங்­களும் படத்­தில் இருக்­கு­மாம். விம­லைப் பொறுத்­த­வரை கச்­சி­த­மாக நடித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

லண்­ட­னில் விமல், ஸ்ரேயா இடம்­பெற்ற ஒரு துரத்­தல் காட்­சி­யைப் பட­மாக்­கி­ன­ராம். அப்­போது இரு­வ­ரும் கைப்­பை­யு­டன் மாறி மாறி ஓடும் காட்­சி­யைப் பார்த்து பொது­மக்­கள் மிரண்டு போயி­ருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் லண்­டன் போலி­சாரே படப்­பி­டிப்பு நடந்த இடத்­துக்கு வந்­து­விட்­ட­ன­ராம். யாரோ ஸ்ரே­யா­வின் கைப்­பையை பறித்­துக்­கொண்டு ஓடு­வ­தாக அவர்­க­ளுக்குப் புகார் போயி­ருக்­கிறது. அதன்­பி­றகு நடப்­பது படப்­பி­டிப்­பு­தான் என்­பதை அறிந்து சிரித்­த­ன­ராம்.

"இப்­படி நிறைய சுவா­ர­சி­யங்­க­ளுக்கு மத்­தி­யில் இந்­தப் படத்தை உரு­வாக்கி இருக்­கி­றோம். பொது­வா­கவே சில படங்­க­ளைத் தயா­ரித்­த­வன் என்ற முறை­யில் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் கஷ்ட நஷ்­டங்­களை அறிந்து வைத்­தி­ருக்­கி­றேன். அத­னால் ஒரு படத்தை இயக்­கும்­போது பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­வேன்," என்று சொல்­லும் மாதேஷ், இயக்­கு­நர் சங்­க­ரின் நெருங்­கிய நண்­பர்.

அத­னால் ஒரு படத்தை எப்­படி உரு­வாக்க வேண்­டும் என்ற நேர்த்­தி­யைத் தெளி­வாக அறிந்து வைத்­தி­ருக்­கி­றார்.

'இந்­தி­யன் 2' படப்­பி­டிப்­பில் நடந்த விபத்து சங்­கரை வெகு­வா­கப் பாதித்­தி­ருக்­கும் என்று கவ­லைப்­ப­டு­கி­றார் மாதேஷ்.

"சங்­கர் சார் தனது உத­வி­யா­ளர்­க­ளைத் தன் குடும்ப உறுப்­பி­ன­ரா­கக் கரு­து­ப­வர். இந்த விபத்து நிச்­ச­ய­மாக அவ­ரைப் பாதித்­தி­ருக்­கும். அதி­லி­ருந்து மீண்டு வரு­வது சிர­மம்­தான். இரு­வ­ரும் வேலை­களில் முனைப்­பாக உள்­ளோம். விரை­வில் அவரை சந்­திப்­பேன்," என்­கி­றார் மாதேஷ்.