நயன்தாராவுக்கு கொரோனா? தாமாகவே தனிமைப்படுத்திக்கொண்டார்

நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகினர் சிலர் கொரோனா அறிகுறி காரணமாக தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனாவின் தாக்கம் சென்னையில் மிகவும் கடுமையாக இருக்கிறது. கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழநி சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் இயக்குனர்கள் மிஷ்கின், விக்னேஷ்சிவன், நடிகை நயன்தாரா உள்லிட்ட சிலர், கொரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

எழும்பூரில் தனிமையில் இருப்பதாக கூறப்படும், நயன்தாரா அண்மையில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

அண்மையில் காலமான திரைப் பாடகர் ஏ.எல். ராகவனுக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது உறுதியாகியுள்ள நிலையில், அவரது மனைவி எம்.என்.ராஜத்திற்கும் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!