அஸ்வின்: திறமைக்குரிய மரியாதை இல்லை

அஸ்வின்: திறமைக்குரிய மரியாதை இல்லை

1 mins read
f7399851-d180-4346-9a4c-46c5ad8ccc34
'ஜீரோ' படத்தின் ஒரு காட்சியில் அஸ்வின், ஷிவாடா. -

பிற மாநி­லங்­களில் இருந்து வரும் கலை­ஞர்­கள் வெற்றி பெற்­றால் மட்­டுமே கொண்­டா­டப்­ப­டு­வ­தா­க­வும் திறமை இருப்­ப­வர்­க­ளுக்­குத் திரை­யு­ல­கில் உரிய மரி­யாதை கிடைப்­ப­தில்லை என்­றும் நடி­கர் அஸ்­வின் தெரி­வித்­துள்­ளார்.

இவர், 'நடு­நிசி நாய்­கள்', 'மங்­காத்தா', '7ஆம் அறிவு', 'இதற்­குத்­தானே ஆசைப்­பட்­டாய் பால­கு­மாரா', 'பிரி­யாணி', 'ஜீரோ' உள்­ளிட்ட படங்­களில் நடித்­த­வர். இவ­ரது அண்­மைய டுவிட்­டர் பதிவு திரை­யு­ல­கில் சில விவா­தங்­களை எழுப்­பி­யுள்­ளது.

தன்னை ஒரு­சி­லர் ஒதுக்­கப் பார்ப்­ப­தா­க­வும் அதற்­காக மேற்­கொள்­ளும் முயற்­சி­கள் குறித்து தாம் நன்கு அறிந்­தி­ருப்­ப­தா­க­வும் அஸ்­வின் தெரி­வித்­துள்­ளார்.

தன்னை ஒதுக்க நினைப்­ப­வர்­க­ளுக்கு தாம் பதி­லடி கொடுக்க நினைத்­த­தில்லை என்­றும் அனை­வ­ரை­யும் ஒரே மாதி­ரி­யாக, மரி­யா­தை­யு­டன் நடத்த மக்­கள் முன்­வ­ர­வேண்­டும் என்­றும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"குறிப்­பாக திரைத்­து­றைக்கு வெளி­யி­லி­ருந்து வரக்­கூ­டிய கலை­ஞர் பெரிய வெற்­றி­யைப் பெற்­றால் மட்­டுமே கொண்­டா­டப்­ப­டு­வார்; கட­வு­ளா­க­வும் பார்க்­கப்­ப­டு­வார்.

"கடின உழைப்பு என்­றும் தோற்­காது என்ற வழக்­க­மான வாக்­கி­யம் பொது­வாக வெற்றி பெற்­ற­வர்­களை வைத்து மட்­டும்­தான் சொல்­லப்­படுகிறது. உங்­களை ஒதுக்கி வைத்து உங்­க­ளது முயற்­சி­களை மட்­டம் தட்டி முது­கி­லும் குத்­து­வார்­கள். ஆனால், ஒரு­வர் தமக்­குப் பிடித்த ஒரு விஷ­யத்தை செய்ய இந்­தக் கசப்­பான அனு­ப­வங்­களை தாங்­கிக்­கொள்ள வேண்­டும்," என்று அஸ்­வின் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஒரு­வரை மட்­ட­மாக நடத்­தி­விட்டு பின்பு அவரை கட­வு­ளாக்­கு­வது சரி­யல்ல என்­றும், மாறாக முத­லில் மனி­தர்­க­ளாக நடத்­த­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.