இந்தி நடிகர் சுஷாந்தின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகிறது.
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நாயகனாக நடித்த சுஷாந்த் சிங் அண்மையில் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
எனினும் ஒரு தரப்பினர் அவர் கொலை செய்யப்பட்டதாகப் புகார் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஷாமிக் மௌலிக் என்பவர் சுஷாந்தின் வாழ்க்கையை திரைப்படமாக்குகிறார். ‘ஒரு நடிகன் மறைந்து விட்டான்’ எனும் பொருள்பட அப்படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.