தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேரத்தை வீணடிக்க மாட்டாராம் சம்யுக்தா

3 mins read
36d3646b-73ad-4dbf-8ad3-e6568cb737cb
ஒவ்­வொரு நாளை­யும் தாம் மிகப் பய­னுள்ள வகை­யில் செல­விட்டு வரு­வ­தாக நடிகை சம்யுக்தா ஹெக்டே அண்­மைய பேட்­டி­ ஒன்றில் குறிப்­பிட்­டுள்­ளார். படம்: ஊடகம் -

ஊர­டங்கு நேரத்­தில் பொழுது போக­வில்லை என்று யாரும் சொல்­லக்­கூடாது என்­கி­றார் நடிகை சம்­யுக்தா ஹெக்டே. ஒவ்­வொரு நாளை­யும் தாம் மிகப் பய­னுள்ள வகை­யில் செல­விட்டு வரு­வ­தாக அண்­மைய பேட்­டி­யில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

தமி­ழில் வெளி­யான 'கோமாளி', 'பப்பி' ஆகிய படங்­க­ளின் மூலம் இளை­யர்­க­ளின் பார்­வை­யைத் தன் பக்­கம் திருப்பி உள்ள இவர், மேலும் சில தமிழ்ப் படங்­களில் நடிக்­கத் திட்­ட­மிட்­டுள்­ளார். கடந்த இரு மாத காலத்­தில் பல இயக்­கு­நர்­க­ளி­டம் கதை­க­ளைக் கேட்­டுள்­ளா­ராம். எனி­னும் அடுத்த படம் குறித்த அறி­விப்பை தற்­போது வெளி­யி­டும் எண்­ணம் இல்லை என்­கி­றார்.

கடந்த 3 மாதங்­க­ளாக சமூக வலைத்­த­ளங்­களில் பர­ப­ரப்­பாக இயங்கி வரு­கி­றார் சம்­யுக்தா. தாம் நட­ன­மா­டும் காட்­சி­கள், உடற்­ப­யிற்சி செய்­வது, மற்ற சுவா­ர­சி­ய­மான நட­வ­டிக்­கை­கள் தொடர்­பான காணொ­ளி­க­ளை­யும் புகைப்­ப­டங்­க­ளை­யும் தொடர்ந்து வெளி­யிடு­கி­றார்.

உடற்­ப­யிற்சி செய்­வ­தென்­றால் இவ­ருக்குக் கொள்­ளைப் பிரி­ய­மாம். ஆனால் ஊர­டங்­கால் உடற்­ப­யிற்­சிக் கூடத்­துக்­குச் செல்ல முடி­யா­மல் தவிக்­கி­றார்.

"சினிமா சார்ந்த பணி­களில் ஈடு­ப­டா­த­தும் வருத்­த­ம­ளிக்­கிறது. ஆனா­லும், வீட்­டில் தின­மும் நட­னப் பயிற்சி மேற்­கொள்­கி­றேன். தரை ஓவி­யங்­கள் வரை­வது, சமைப்­பது ஆகி­ய­வற்­று­டன் எவ்­வாறு மன­தில் இருப்­ப­னவற்றை எழுத்­தாக வடிப்­பது என்­பது குறித்­தும் பயிற்சி பெறு­கி­றேன். அது­மட்­டு­மல்ல, அனு­ப­வ­முள்ள சில­ரி­டம் நடிப்­புப் பயிற்­சி­யும் பெறு­கிறேன்," என்­கி­றார் சம்­யுக்தா.

ஊர­டங்­கின்­போது பெற்­றோ­ரு­டன் தங்­கி­யி­ருப்­பது மகிழ்ச்சி தரு­வ­தா­கக் குறிப்­பி­டு­ப­வர், ஒரு­வேளை தனித்து இருந்­தால் தாக்­குப் பிடித்­தி­ருக்க முடி­யுமா என்­பது சந்­தே­கம்­தான் என்­கி­றார்.

"ஊர­டங்கு அறி­விக்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு சென்­னை­யில் குடி­யே­ற­லாம் என்று திட்­ட­மிட்­டி­ருந்­தேன். பெற்­றோ­ரும் இம்­மு­டிவை ஏற்­றுக் கொண்­ட­னர். ஆனால், தற்­போ­தைய சூழ­லைப் பார்க்­கும்­போது சென்­னைக்­குச் செல்­லா­மல் இருந்­ததே நல்­லது என்று தோன்­று­கிறது.

"கொரோனா கிரு­மித் தொற்று பாதிப்­பில் இருந்து சென்னை மாந­க­ரம் முழு­மை­யாக விடு­பட்ட பிற­கு­தான் அங்கு செல்­வது குறித்து யோசிக்க முடி­யும்," என்று சொல்­லும் சம்­யுக்தா தமது தாய்­மொ­ழி­யான கன்­ன­டத்­தி­லும் புது வாய்ப்­பு­கள் தேடி வரு­வது மனநிறைவு அளிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தமி­ழில் புதுப்­ப­டம் ஒன்­றில் ஒரு பாட­லை­யும் பாடப் போகி­றா­ராம். இது­கு­றித்து இப்­போது எது­வும் சொல்ல இய­லாது என்­கி­றார்.

"தமி­ழில் கேட்ட சில கதை­கள் என் மன­தைக் கவர்ந்­துள்­ளன. அனு­பவமுள்ள மற்­றும் புது இயக்­கு­நர்­கள் நல்ல கதா­பாத்­தி­ரங்­க­ளு­டன் அணு­கி­யுள்­ள­னர்.

"ஆனால், நான் எந்த முடி­வும் எடுக்­க­வில்லை. நாடு முழு­வ­தும் இயல்பு­நிலை திரும்­பிய பிற­கு­தான்­அடுத்து நடிக்­கும் படங்­கள் குறித்து அறி­விப்­பு­கள் வெளி­யா­கும். கன்­ன­டத்­தில் சிறந்த படங்­களில் நடிக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன். தற்­போ­துள்ள நடி­கர்­களை விட என்­னால் கன்­ன­டத்­தில் மிகச் சர­ள­மா­க­வும் தவ­று­கள் இல்­லா­ம­லும் பேச­மு­டி­யும்.

"எனவே இந்த ஒரு தகு­தியே கன்­ன­டத் திரை­யு­ல­கில் நான் நடிப்­ப­தற்கு போது­மா­னது எனக் கரு­து­கி­றேன்," என்று சொல்­லும் சம்­யுக்தா, பிற மொழி­களில் இருந்­தும் தமக்கு நல்ல வாய்ப்­பு­கள் தேடி­வருவது மன­நி­றைவு தரு­வ­தா­கச் சொல்­கி­றார்.

மழை­யில் நட­ன­மா­டு­வது, இரு­சக்­கர வாக­னம் ஓட்­டு­வது, கடற்­க­ரை­யில் மண­லில் விளை­யாடி அலை­யில் குளிப்­பது என்று பல­வற்­றைச் செய்ய வேண்­டும் என்று ஆசைப்­ப­டு­வ­தா­க­வும் ஆனால் சூழ்­நிலை இவற்றை அனு­ப­விக்க இடம் கொடுக்­க­வில்லை என்ற புலம்­ப­லும் சம்­யுக்­தா­வி­டம் உள்­ளது.

"கோடம்பாக்கத்தில் எனது திறமையைப் பாராட்டி ஊக்கப்படுத்துவதற்கு என சிலர் இருப்பது நெகிழ வைக்கிறது.

"மிக விரைவில் தமிழிலும் கன்னடத்திலும் எனது நடிப்பில் சிறந்த படைப்புகள் வெளியாகும் என நம்புகிறேன்," என்கிறார் இந்த இளம் நாயகி.