கடந்த மே 1ஆம் தேதி வெளியீடு காண இருந்த ‘மூக்குத்தி அம்மன்’ படம், தமிழகத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகே வெளியாகும் என அறிவித்துள்ளார் அதன் இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ஆர்ஜே பாலாஜி.
இதனால் பட வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருந்த நயன்தாராவுக்கு சற்று ஏமாற்றம் தானாம்.
அந்தளவு ஈடுபாட்டுடன் இதில் நடித்துள்ளார் நயன்தாரா.
எனினும் படம் நன்றாக உருவாகி இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்படுவது அவருக்கு உற்சாகம் அளித்திருப்பதாகத் தகவல்.