துவங்காத படப்பிடிப்பு: அருண் விஜய் கோபம்

அருண் விஜய் நடிக்­கும் ‘பாக்­ஸர்’ படம் சில பிரச்­சி­னை­க­ளால் முடங்­கி­யி­ருப்­பது தெரி­யும். இந்­நி­லை­யில் சில புதிய தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

‘அக்­னிச் சிற­கு­கள்’, ‘சினம்’, அறி­வ­ழ­கன் இயக்கி வரும் படம் என மூன்று படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார். ஆனால் இவற்­றுக்­கும் முன்­பா­கவே அவர் நடிக்க ஒப்­புக்­கொண்ட படம்­தான் ‘பாக்­ஸர்’.

நல்ல கதைக்­க­ளம், விறு­வி­றுப்­பான திரைக்­கதை ஆகி­ய­வற்­றால் ஈர்க்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­கவே நடிக்க சம்­ம­தித்­தா­ராம்.

மேற்­கு­றிப்­பிட்ட படங்­க­ளுக்கு முன்­பா­கவே ‘பாக்­ஸர்’ படத்­துக்கு பூசை நடத்தி, கையோடு படப்­பி­டிப்­பை­யும் துவங்­கி­னர்.

தலைப்­பைக் கேட்­ட­வு­ட­னேயே இது என்ன மாதி­ரி­யான படம், கதை என்­பதை ரசி­கர்­கள் யூகித்­து­விட முடி­யும். படத்­துக்கு பூசை போட்ட சில தினங்­களில் வெளி­நாட்­டுக்­குப் பறந்து சென்­றார் அருண்.

அங்கு தற்­காப்­புக் கலை­களில் உள்ள புதிய நுணுக்­கங்­க­ளைக் கற்­றுத் தேர்ந்­தார்.

இந்­நி­லை­யில் ‘பாக்­ஸர்’ படத்­தின் முதல்தோற்­றச் சுவ­ரொட்­டி­கள் வெளி­யாகி இணை­யத்­தில் பெரும் வர­வேற்­பைப் பெற்­றன.

நல்­ல­தொரு நாளில் படப்­பி­டிப்பு தொடங்­கி­ய­தாம். ஆனால் பத்து நாட்­க­ளுக்­குப் பிறகு எந்­தத் தக­வ­லும் இல்லை.

அடுத்­த­க்கட்ட படப்­பி­டிப்பு குறித்து ஏதும் தக­வல் இல்­லாத­தால் பிறப் படங்­களில் கவ­னம் செலுத்­தத் தொடங்­கி­னார் அருண் விஜய். ஆனால் நீண்ட கால­ தா­ம­தம் ஏற்­ப­டவே, அறிக்கை ஒன்றை வெளி­யிட்ட அவர், இப்­ப­டத்­துக்­காகத் தம்­மைத் தயார்ப்­ப­டுத்தக் கடி­ன­மாக உழைத்து வந்­த­தாக குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இதன் மூலம் ‘பாக்­ஸர்’ படத்­தில் சிக்­கல் உரு­வாகி உள்­ளது தெளி­வா­கிறது. படப்­பி­டிப்பு தாம­த­மா­ன­தால் படக்­கு­ழு­வி­னர் மீது அவர் கடுங்­கோ­பத்­தில் இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே இப்­ப­டம் தொடர்­பான இன்­னொரு தக­வ­லும் கசிந்­துள்­ளது. படத்­தின் தயா­ரிப்­பா­ளர், அருண் விஜய்யை ஒப்­பந்­தம் செய்­த­போது இந்தி நடி­கர் அனு­ராக் காஷ்­யப்பை வில்­ல­னாக நடிக்­க ­வைக்­கத் திட்­டம் என்று கூறி­ இருந்­தா­ராம்.

அரு­ணுக்­கும் இந்த ஏற்­பாடு பிடித்­துப் போகவே உற்­சா­கத்­து­டன் நடிக்க ஒப்­புக்­கொண்­டுள்­ளார்.

ஆனால் பத்து நாட்­கள் கழித்­துப் படப்­பி­டிப்பு நின்று போனது, தயா­ரிப்­புத் தரப்­பில் போது­மான பண­மில்லை, எதிர்­பார்த்த தொகை கிடைக்­க­வில்லை என்­றெல்­லாம் சொல்­லப்­பட்ட கார­ணங்­க­ளால் அரு­ணும் குழம்­பி­யி­ருப்­ப­தா­கத் தக­வல்.

மேலும், அனு­ராக் காஷ்­யப் இப்­ப­டத்­தில் நடிக்க வாய்ப்­பில்லை என்­றும் அவர் முடி­வுக்கு வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே படத்­தின் தயா­ரிப்­பா­ளர் தாமே வில்­ல­னாக நடிக்க முடிவு செய்­தி­ருப்­ப­தா­க­வும் அருண் காது­க­ளுக்கு ஒரு தக­வல் போன­தாம்.

இது­வும் அவ­ருக்கு எரிச்­சல் ஏற்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­ப­டு­கிறது. இதன் பிறகே அவர் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.

ஆக மொத்­தத்­தில் ‘பாக்­ஸர்’ படம் முடி­யும் முன்பே மோதல் தொடங்கிவிட்­டது. எனி­னும் அருண் விஜய்யை சமா­தா­னப்­ப­டுத்­தும் முயற்­சி­யும் ஒரு­பக்­கம் நடந்து கொண்­டி­ருப்­ப­தா­கத் தகவல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!