கொரோனாவால் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில் திரையுலகம் மிகவும் அமைதியாக இருப்பதைப் பொறுக்காமல் ரசிகர்களிடையே ‘டாக்டர்’ படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனையும் ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதியையும் ஒப்பிட்டுப் பார்த்து இணையத்தில் காரசாரமாக பதிவுகளை போட்டவண்ணம் இருக்கிறார்கள்.
இதில் நானா? நீயா? என்று இந்த இரண்டு நடிகர்களுமே இறங்கி இருப்பதால் ரசிகர்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.
தமிழ்த்திரை உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சில நடிகர்களுக்கு போட்டியாக அதே காலகட்டத்தில் அறிமுகமான நடிகர்களை வைத்து ஒப்பிடுவது காலம் காலமாக இருந்து வருகிறது.
இவ்வாறு பலரும் அறிந்த எம்ஜிஆர் சிவாஜி என்று தொடங்கிய இந்த ஒப்பீடு தற்பொழுது ரஜினி கமல், விஜய் அஜித், சிம்பு தனுஷ், சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சிவகார்த்திகேயன் தற்பொழுது தமிழ்த் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக, கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
கலகலப்பான படங்களில் தனது இயல்பான நகைச்சுவை உணர்வு மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வரும் இவர் தற்போது ‘அயலான்’, ‘டாக்டர்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
தனது எதார்த்தமான நடிப்பின் மூலமும் அலட்டிக்கொள்ளாத குணத்தின் மூலமும் தமிழில்
மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்றுள்ளவர் விஜய் சேதுபதி.
இவர் நடித்த பல படங்கள் இன்றளவும் நடிப்பிற்கான சிறந்த படங்களாக பலராலும் போற்றப்பட்டு வருகிறது.
இவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படத்தின் கதாபாத்திரங்களிலும் எந்த ஒரு நடிகரும் நடிக்க சற்றுத் தயங்கும் கதைகளிலும் தனது வேடம் பற்றி சிறிதும்
கவலைப்படாமல் நடித்து அதில் ‘மாஸ்’ காட்டி வருகிறார்.
பொதுவாக மலையாள ரசிகர்களுக்கு தமிழ் நடிகர்கள் என்றால் ஒரு படி அதிகமாகப் பிடிக்கும்.
அந்த வகையில் விஜய் சேதுபதி மலையாள ரசிகர்களிடம் அனைவரும் வியக்கும் தனது எளிமையான குணத்தின் மூலம் மிகப்பெரிய நன்மதிப்பைப் பெற்று அங்கும் பல ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுள்ளார்.
இவ்வாறு இரண்டு முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும்போதும் ஒப்பிட்டுப் பார்க்கும் ரசிகர்கள் சமீபத்தில் யாருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றனர் எனவும் ஒப்பிட்டுப் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஜய் சேதுபதி டுவிட்டரில் தன்னை 1 மில்லியன் ரசிகர்கள் தொடர்வதைக் குறிப்பிட்டு ‘ஓம்’ என்ற எழுத்தை கையில் வைத்து கட்டி அணைத்தவாறு ஒரு ‘மாஸான’ புகைப்
படத்தை வெளியிட்டு அளவில்லாமல் ஆதரவு கொடுத்து வரும் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
விஜய்சேதுபதிக்கு, இயக்குநர் கோகுல் பாராட்டு தெரிவித்து கூறுகையில், “சுமார் மூஞ்சி குமார், குமுதாவைப் பின்தொடர்ந்தார். மக்கள் எல்லாரும் ‘மக்கள் செல்வனை’ பின்தொடர்கின்றனர். உழைப்புதான் பெரிது என்றால், பின்தொடர உன்போல் ஆளில்லை,’’ என்று பதிவிட்டிருந்தார்.
விஜய் சேதுபதி வெளியிட்ட ஒரு சில மணி நேரத்திலேயே சிவகார்த்திகேயனும் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 மில்லியன் ரசிகர்கள் தன்னைப் பின் தொடர்வதாகக் குறிப்பிட்டு, “60 லட்சம் பேருக்கும் நன்றி. நிபந்தனையற்ற அன்பு செலுத்தி, ஆதரவு காட்டும் என், சகோதர - சகோதரியருக்கு சிறப்பான நன்றி,’’ என்று பதிவிட்டிருந்தார்.
இவ்வாறு விஜய் சேதுபதி டுவிட்டரில் 1 மில்லியன் தொடர்வதையும் சிவகார்த்திகேயன் 6 மில்லியன் தொடர்வதையும் ஒரு சில ரசிகர்கள் சுட்டிக்காட்டி விஜய் சேதுபதி ‘மாஸ்’னா சிவகார்த்தி கேயன் ‘பக்கா மாஸ்’ என இருவரையும் ஒப்பிட்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘டாக்டர்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று வெளியாக இருக்கிறது.
விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ படம் 50 சதவிகிதப் படப்பிடிப்பு மட்டும் நடந்திருக்கிறது. கொரோனாவால் தற்பொழுது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதனால் தேதி வெளியிடப்படவில்லை.
அதற்குள் இவர் விஜய்யுடன் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ படமும் க.பெ.ரணசிங்கம் என்ற படமும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.