தெலுங்கில் மீண்டும் கீர்த்தி சுரேஷ்

மகேஷ் பாபு நடிக்கவுள்ள ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சரிலேரு நீக்கெவரு’. பொங்கல் விடுமுறைக்கு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

அதனைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இறுதியாக ‘கீதா கோவிந்தம்’ இயக்குநர் பரசுராம் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மகேஷ் பாபு. தனது தந்தை கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று படத்தில் நடிக்க இருப்பது குறித்து அறிவித்தார்.

‘சர்காரு வாரி பாட்டா’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இதில் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!