கதை எழுதும் நித்­யா ­மே­னன்

கதை எழுதும் நித்­யா ­மே­னன்

3 mins read
7d5bb6ec-cc5d-435c-be91-280d21ec0d6f
நித்­யா ­மே­னன் -

ரசி­கர்­க­ளைத் தற்­கா­லி­க­மாக மகிழ்­விப்­பது மட்­டுமே ஒரு நடி­கைக்­குப் பெயர் வாங்­கித் தந்து விடாது என்­கி­றார் நித்­யா ­மே­னன்.

தாம் நடிக்­கும் படங்­கள் காலத்­தைக் கடந்து நிற்­க­வேண்­டும் என்­பதே தமது விருப்­பம் என்­கி­றார்.

கடந்த 2006ஆம் ஆண்டு வெளி­யான '7o clock' படத்­தின் மூலம் திரையு­ல­கில் அறி­மு­க­மான இவர் பின்­னர் மலை­யா­ளம், தமிழ், தெலுங்கு மொழி­க­ளி­லும் பர­வ­லாக நடித்து பாராட்­டு­க­ளைப் பெற்­றுள்­ளார்.

நித்­யா­வின் யதார்த்­த­மான நடிப்­புக்கு நிறைய ரசி­கர்­கள் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில், அண்­மைய பேட்டி ஒன்­றில் தமது திரைப்­ப­ய­ணத்­தைத் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ள­வில்லை என்­றும் அனைத்­தும் தன் போக்­கில் நடந்து வரு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

சினி­மா­வில் நடிப்­பது ஒரு பணி என்­றால் இசை மற்­றொரு பணி என்­கி­றார் நித்யா.

இவர் நன்­றா­கப் பாடு­வார் என்­பது பல­ருக்­குத் தெரி­ய­வில்லை. இந்­தக் கொரோனா ஊர­டங்கு வேளை­யில் இரண்டு தனிப்­பா­டல்­க­ளைப் பாடி­யுள்­ளா­ராம். இரண்­டுமே ரசி­கர்­களை நிச்­ச­யம் கவ­ரும் என்­கி­றார்.

"இசையை எனது திரை­வாழ்க்­கை­யின் முக்­கி­யப் பகு­தி­யா­கக் கருது­கி­றேன்.

"இத்­த­கைய படங்களில்­தான் நடிக்­க­வேண்­டும் என்று முன்­கூட்­டியே திட்­ட­மி­டு­வது என் வழக்­க­மல்ல. வாய்ப்­பு­கள் தானா­கத் தேடி­வந்­தன. நானும் அவற்றை ஏற்­றுக்­கொண்­டேன். என்­னைப் பொறுத்­த­வரை இத்­த­கைய கதை­கள்­தான் வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­வ­தில்லை. நல்ல படங்­களில் நடிக்­க­வேண்­டும் என்­பது மட்­டுமே எனது இலக்கு. அந்­தப் படங்­கள் என்னை நினைத்து நானே பெரு­மி­தம் கொள்­ளும் வகை­யில் காலத்­தைக் கடந்து நிற்­க­வேண்­டும்," என்­கி­றார் நித்­யா­ மே­னன்.

அண்­மைய ஓய்­வைப் பயன்­ப­டுத்தி சில கதை­களும் எழுதி வரு­கி­றா­ராம். நீண்ட நாட்­களா­கவே ஒரு திரைப்­ப­டத்­திற்­கு­ரிய கதை, திரைக்­க­தையை எழு­த­வேண்­டும் என்­பது இவ­ரது இலக்­காக இருந்­துள்­ளது. ஆனால் தொடர் படப்­பி­டிப்­பு­கள், இதர பணி­க­ளின் கார­ண­மாக கதை எழு­து­வ­தற்கு நேரம் ஒதுக்­க­மு­டி­யா­மல் போன­தாம்.

"இப்­போது கதை எழு­தும் பணி­யைத் தொடங்­கி­விட்­டேன். ஆனால், அதை எப்­போது முடிப்­பேன் என்­பது தெரி­யாது. இதற்­கென காலக்­கெடு எதை­யும் நிர்­ண­யித்­துக் கொள்­ள­வில்லை. எழு­தத் தோன்­றி­னால் எழு­து­கி­றேன்... இல்­லை­யென்­றால் பேசா­மல் இருந்­து­வி­டு­கி­றேன்," என்று சொல்­லும் நித்யா, இரண்டு இணை­யத் தொடர்­களில் நடித்து முடித்­துள்­ளார்.

அவற்­றுக்கு நல்ல வர­வேற்பு கிடைக்­கும் என நம்­பு­கி­றா­ராம். 'ஓடிடி' எனப்­படும் புதிய முறை­யின்கீழ் திரைப்­ப­டங்­கள் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யா­வது நல்ல முன்­னேற்­றம் என்­பதே இவ­ரது கருத்து.

"திரை­ய­ரங்­கங்­க­ளுக்­குச் சென்று திரைப்­படம் பார்க்­கும் சுகத்­திற்கு ஈடு இணை இல்லை. அதே­ச­ம­யம் இணை­யத்­தில் நேர­டி­யாக ஒளி­பரப்­பு­வது அதி­க­ரித்து வரு­கிறது. வீட்­டில் இருந்­த­ப­டியே நமக்கு ஏற்­ற­வாறு ஒரு திரையை அமைத்­துக்­கொண்டு படங்­க­ளைப் பார்க்க பல­ரும் விரும்­பு­கி­றார்­கள்," என்­கி­றார் நித்யா.

பொது­வாக சில மாதங்­கள் இடை­வி­டா­மல் உழைப்­ப­வர் பிறகு திடீ­ரென மாய­மாகி விடு­வா­ராம். ஒன்­றி­ரண்டு மாதங்­கள் ஓய்­வெ­டுத்த பிறகு நடித்­தால்­தான் உற்­சா­க­மாக இருக்­கும் என்­கி­றார்.

"எப்­படி கைபே­சி­களை 'சார்ஜ்' செய்­கி­றோமோ அதே­போல் நம் உட­லுக்­கும் ஒரு சக்தி தேவைப்­படு­கிறது. இரண்டு படங்­களில் நடித்து முடித்­தி­ருக்­கும்­போது உட­லில் உள்ள ஒட்­டு­மொத்த சக்­தி­யும் உறிஞ்­சப்­பட்­ட­தாக உணர்­வேன். அத­னால்­தான் வலுக்­கட்­டா­ய­மாக ஓய்­வெ­டுப்­பேன்.

"ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­போது அது எனக்கு புதிய நட­வ­டிக்­கை­யா­கத் தோன்­ற­வில்லை. வீட்­டி­லேயே இருப்­பது எனக்­குப் பழகி­விட்­டது. இணை­யம் வழி நிறைய விஷ­யங்­களைப் படிக்­கி­றேன், கற்­றுக்­கொள்­கி­றேன். வீட்டைச் சுத்­தப்­ப­டுத்­து­வது, சமைப்­பது, அழகு­படுத்­து­வது என எல்லாம் செய்­கி­றேன்.

"மீண்­டும் இயல்­பு­நிலை எப்­போது திரும்­பும் என்­பது தெரி­ய­வில்லை. இப்­போது எதற்­கும் உத்­த­ர­வா­த­மும் இல்லை. ஆனால், இத்­த­கைய நிச்­ச­ய­மற்ற தன்­மை­யும்­கூட என்னை ரசிக்க வைக்­கிறது. இச்­சூழ்­நி­லை­யில் நம் இத­யம் செய்­யச் சொல்­லும் எந்த வேலை­யை­யும் தயக்­கமோ பயமோ இன்­றிச் செய்­ய­லாம். இது­நாள்­வரை நேர­மின்­மை­யால் எதை­யெல்­லாம் செய்­ய­மு­டி­யா­மல் தவித்­தேனோ அவற்றை இப்­போது செய்­கி­றேன்," என்­கி­றார் நித்யா மேனன்.