தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சம்யுக்தா: இதைவிட சிறந்த பரிசு இல்லை

2 mins read
011e00a4-a9fd-4949-ae1d-4bfd295d7032
இயற்கை என்­பது மிகப்­பெ­ரிய சக்தி. அத­னி­டம் நீங்­கள் மிக வலு­வான ஒரு கோரிக்­கையை முன்­வைத்­தீர்­கள் எனில் நிச்­ச­ய­மாக அது சாத்­தி­ய­மா­கும் என்­கி­றார் சம­யுக்தா ஹெக்டே. படம்: ஊடகம் -

இந்த ஆண்டு தமது பிறந்­த­நாளை மிகச் சிறப்­பா­கக் கொண்­டா­டி­ய­தா­கக் கூறு­கி­றார் இளம்­நா­யகி சம்­யுக்தா ஹெக்டே.

கடந்த 17ஆம் தேதி தனது 22வது பிறந்­த­நாளை தமக்­குப் பிடித்த விதத்­தில் கொண்­டாடி மகிழ்ந்­த­தாக சமூக வலைத்­த­ளப் பக்­கத்­தில் அவர் பதி­விட்­டுள்­ளார். இரண்டு புகைப்­ப­டங்­களும் அதில் இடம்­பெற்­றுள்­ளன.

தமி­ழில் 'கோமாளி', 'பப்பி' உள்­ளிட்ட படங்­களில் நடித்­துள்ள சம்­யுக்தா, தொடர்ந்து தமி­ழில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

சம்­யுக்­தாவை இன்ஸ்­ட­கி­ராம் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­களில் ஏரா­ள­மா­னோர் பின் தொடர்­கின்­ற­னர். இவர் ஓர் இயற்கை ஆர்­வ­லர். படப்­பி­டிப்பு இல்லை என்­றால் உடனே வெளி­யூர் பறந்து விடு­கி­றார்.

எங்கு சென்­றா­லும் அங்­குள்ள வனப்­ப­கு­தி­கள், மலைப்­ப­கு­தி­களில் சுற்­றித் திரி­வா­ராம். மலை­யேற்­றப் பயிற்­சி­யும் காடு­களை வலம் வரு­வ­தும் இவ­ருக்­குப் பிடித்­த­மான பொழு­து­போக்­கு­கள்.

இம்­முறை தமது பிறந்­த­நா­ளன்று வெளி­யூர், வெளி­மா­நி­லங்­கள் என்று எங்­கும் செல்­ல­மு­டி­யா­த­படி கொரோனா கிருமி தம்மை முடக்­கி­விட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அதிர்ஷ்­ட­வ­ச­மாக ஒரு வனப்­ப­கு­திக்கு அருகே தங்­கி­யி­ருந்­த­தா­கக் கூறி­யுள்­ளார்.

"இந்­தப் பிறந்­த­நா­ளன்று நான் தற்­போது தங்­கி­யுள்ள பகு­தி­யில் பரந்து விரிந்­துள்ள எஸ்­டேட்­டில் உற்­சா­க­மா­கச் சுற்­றித் திரிந்­தேன். எங்கு திரும்­பி­னா­லும் பசு­மை­யான மரங்­களும் சிறு நீர்­நி­லை­க­ளை­யும் காண­மு­டிந்­தது.

"இதை­விட சிறந்த பிறந்­த­நாளை இனி­மே­லும் அனு­ப­விக்க இய­லுமா எனத் தெரி­ய­வில்லை. ஆசை தீர அங்கு நிறைய புகைப்­ப­டங்­கள் எடுத்­துக்­கொண்­டேன்," என்று தமது பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார் சம்­யுக்தா.

பிறந்­த­நா­ளன்று இவ­ருக்கு ஏரா­ள­மா­னோர் வாழ்த்­துத் தெரி­வித்­த­ன­ராம்.

எனி­னும் தாம் தங்­கி­யி­ருந்த பகு­தி­யில் இணைய இணைப்பு மோச­மாக இருந்­த­தால் தன்­னைத் தொடர்­பு­கொண்ட அனை­வ­ரு­ட­னும் பேச இய­லா­மல் போனது என்று வருத்­தப்­ப­டு­கி­றார்.

"எல்­லோ­ருமே பிறந்­த­நா­ளன்று எனக்கு வாழ்த்­துத் தெரி­விக்க வேண்­டும் என்று விரும்­பி­னர். ரசி­கர்­கள் மற்­றும் நண்­பர்­க­ளின் இந்த அன்பு என்னை நெகி­ழ­வைத்­துள்­ளது.

"இயற்கை என்­பது மிகப்­பெ­ரிய சக்தி. அத­னி­டம் நீங்­கள் மிக வலு­வான ஒரு கோரிக்­கையை முன்­வைத்­தீர்­கள் எனில் நிச்­ச­ய­மாக அது சாத்­தி­ய­மா­கும்," என்­கி­றார் சம­யுக்தா ஹெக்டே.

"இயற்­கையை நேசிக்­கும் இவர் அதற்­காக எதை­யும் விட்­டுக்­கொ­டுக்­கத் தயார் என்­கி­றார்.

சம்­யுக்தா இப்­படி என்­றால் நடிகை ஷ்ருதி ஹாசன் நல்ல கதை­யும் கதா பாத்­தி­ரங்­களும் தான் முக்­கி­யம் என்­கி­றார்.

இவை இரண்­டும் நல்­ல­வி­த­மாக அமை­யும் பட்­சத்­தில் சம்­ப­ளம் குறித்து கவ­லைப்­ப­டா­மல் நடிக்­கத் தயார் என்­கி­றார் ஷ்ருதி.

"நிறைய படங்­களில் நடிப்­பது ஒன்­றும் பெரிய விஷ­ய­மல்ல.

"நமக்கு திருப்தி ஏற்­பட வேண்­டும் என்­பது தான் முக்­கி­யம்.

"இதில் கவனம் தேவை," என்­கி­றார் ஷ்ருதி.

தமி­ழில் இப்­போது மூன்று படங்­களில் நடிக்கி றாராம் ஷ்ருதி.