'வில்லன் கூட அழகுதான்'

'வில்லன் கூட அழகுதான்'

3 mins read
b3a4de1b-aea8-4994-8dba-7ba092b46e8d
கௌதம் படம் என்­ப­தால் எது­கு­றித்­தும் யோசிக்­கா­மல் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தா­கச் சொல்­ப­வர் கிரு‌ஷ்ணா, கௌதம் படத்­தில் வில்­ல­னும்­கூட அழ­கன்­தான் என்­கி­றார்.. -

நாய­க­னாக நடித்­துக் கொண்­டி­ருந்த கிருஷ்ணா இப்­போது வில்­லன் கதா­பாத்­தி­ரங்­க­ளை­யும் ஏற்­கி­றார்.

கௌதம் மேனன் இயக்­கத்­தில் உரு­வாகி வரும் 'ஜோஷ்வா' படத்­தில் இவர்­தான் வில்­ல­னாம்.

கௌதம் படம் என்­ப­தால் எது­கு­றித்­தும் யோசிக்­கா­மல் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தா­கச் சொல்­ப­வர், கௌதம் படத்­தில் வில்­ல­னும்­கூட அழ­கன்­தான் என்­கி­றார்.

அண்­மைய சில மாதங்­க­ளாக 'ஜோஷ்வா' படப் பணி­களில் ஈடு­பட்டு வந்­தா­லும் அது­ கு­றித்து கிருஷ்ணா அதி­கம் பேச­வில்லை. இவ­ரது நெருங்­கிய சில நண்பர்களுக்கு கூட வில்­லன் வேடத்­தில் நடிப்­பது தெரி­யா­தாம்.

படத்­தின் முன்­னோட்­டக் காட்­சித் தொகுப்பு வெளி­யான பிறகு பல­ரும் தொடர்­பு­கொண்டு 'நீங்­களா வில்­லன்?' என ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தாக சொல்­லிச் சிரிக்­கி­றார்.

"கௌதம் சாரைப் பல ஆண்­டு­க­ளாக அறி­வேன். என்­னு­டைய நண்­பர் செந்­தில் வீரா­சாமி அவ­ரி­டம் இணை இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றி­னார். நண்­ப­னைப் பார்க்­கப் போவ­தா­கச் சொல்­லிக்­கொண்டு அடிக்­கடி கௌதம் சார் படத்­தின் படப்­பி­டிப்பு நடக்­கும் இடத்­துக்­குச் செல்­வேன்.

"என்­றே­னும் ஒரு­நாள் அவர் படத்­தில் நடிக்க அழைப்­பார் என்ற நம்­பிக்கை இருந்­தது. ஒரு­கட்­டத்­தில் நானே அவ­ரி­டம் நேர­டி­யாக வாய்ப்பு தரு­மாறு கேட்­டேன். நிச்­ச­யம் தரு­வ­தாக கூறி­னார். அது இப்­போது நடந்­தி­ருக்­கிறது," என்­கி­றார் கிருஷ்ணா.

சில மாதங்­க­ளுக்கு முன்பு திடீ­ரென தொடர்புகொண்டு பேசிய கௌதம், நேரில் வரு­மாறு கூறி­னா­ராம்.

அதன்­படி சென்று சந்­தித்­த­போது வில்­ல­னாக நடிக்­கத் தயாரா, கதையை விரி­வா­கச் சொல்­லட்­டுமா? என்று அவர் கேட்­ட­போது, 'அதெல்­லாம் தேவை­யில்லை. உங்­களை நம்பி வரு­கி­றேன்' என்­றா­ராம் கிருஷ்ணா.

"உடனே என்­னைக் கட்­டித் தழுவி நன்றி சொன்­னார். என்­னைச் சகோ­த­ர­ராக கரு­தும் அவர்­மீது பெரிய மரி­யா­தை­யும் நம்­பிக்­கை­யும் உள்­ளது. இந்த உணர்வு எப்­போ­தும் மாறாது.

"வில்­ல­னாக நடிப்­பது பற்றி அண்­ணன் விஷ்­ணு­வர்த்­த­னி­டம் மட்­டும் தக­வல் சொன்­னேன். நல்ல வாய்ப்பு என்று உற்­சா­கப்­ப­டுத்­தி­னார். இதற்கு முன்பு 'நிபு­ணன்' படத்­தில் வில்­ல­னாக நடித்­த­தற்கு கார­ணம் அந்­தக் கதை எனக்­குப் பிடித்­தி­ருந்­தது. இப்­போது கதை கேட்­கா­மல் நடிக்க ஒப்­புக்­கொண்­ட­தற்கு கௌதம் சார்­தான் கார­ணம்," என்று சொல்­லும் கிருஷ்ணா, படப்­பி­டிப்­பின்­போது கௌதம் அனை­வ­ருக்­கும் முழு சுதந்­தி­ரம் கொடுத்­தது தம்மை ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­ய­தா­கச் சொல்­கி­றார்.

முதல்­நாள் படப்­பி­டிப்­பின்­போது இப்­படி நடிக்­க­லாமா, இப்­ப­டிப் பேச­லாமா என கௌத­மி­டம் பல­வி­த­மான சந்­தே­கங்­களை எழுப்­பி­னா­ராம்.

ஆனால் அவரோ 'எப்­ப­டித் தோன்­று­கி­றதோ அதைச் செய்­தால் போதும் என்­றும், ஏதே­னும் மாற்­றம் தேவை­யென்­றால் மட்­டும் சொல்­வ­தா­க­வும் கூறி­னா­ராம்.

"இப்­ப­டி­யொரு இயக்­கு­நரை நான் பார்த்­த­தில்லை. கௌதம் சார் படத்­தில் நாய­கன், நாயகி மட்­டு­மல்ல, வில்­ல­னும்­கூட அழ­கா­கக் காட்சி தரு­வார். இதில் எனக்கு ரவு­டித்­த­னம் உள்ள கதா­பாத்­தி­ரம். நாய­கன் வரு­ணும் நானும் அடிக்­கடி மோதிக்­கொள்­வோம்.

"வருண் பார்ப்­ப­தற்கு திட­காத்­தி­ர­மான உடல்­வா­கும் நல்ல உய­ர­மும் கொண்­ட­வர். என்னை அண்ணா என்­று­தான் கூப்­பி­டு­வார். பதி­லுக்கு நான், 'உன்­னையே அண்­ணாந்து பார்த்­து­தான் பேச­வேண்டி உள்­ளது. கிருஷ்ணா என்றே கூப்­பிடு' என்று கலாட்டா செய்­வேன்.

"ஆனால் வரு­ணுக்கு இணை­யாக என்­னை­யும் அழ­காக கம்­பீ­ர­மாக காட்­சிப்­ப­டுத்தி உள்­ளார் இயக்­கு­நர். அதற்­காக தனிப்­பட்ட வகை­யில் நன்றி சொல்லவேண்­டும்," என்று சொல்­லும் கிருஷ்ணா, சினி­மா­வைக் கடந்து தமக்கு வேறு எது­வும் தெரி­யாது என்­கி­றார்.

திரைத்­து­றை­யில் நுழைந்­தி­ருக்­கா­விட்­டால் தனது வாழ்க்கை எப்­படி இருந்­தி­ருக்­கும் என்­பதை யூகிக்க முடி­ய­வில்லை என்­றும் மிகத் தாம­த­மாக நடிக்க வந்­தது வருத்­த­ம­ளிப்­ப­தா­க­வும் கூறு­கி­றார்.

"சில ஆண்­டு­க­ளுக்கு முன்பே நடி­க­னாகி இருந்­தால் சில தவ­று­களை முன்பே புரிந்து கொண்­டி­ருப்­பேன். இன்­னும் கொஞ்­சம் வேக­மாக முன்­னேறி இருப்­பேன்.

"இப்­போது சற்றே பின்­தங்கி இருக்­கி­றோம் என்று தோன்­று­கிறது. அது வருத்­த­மும் தரு­கிறது.

"எனி­னும் வாழ்க்­கை­யில் ஏற்ற இறக்­கங்­கள் இருப்­ப­தும் நல்­ல­து­தான். இல்­லை­யெ­னில் வாழ்க்கை சுவா­ர­சி­ய­மாக இருக்­காது.

"எடுத்த எடுப்பிலேயே உச்சத் துக்குப் போய்விட்டால் தவறுகளைத் தெரிந்துகொள்ளவும் அவற்றைத் திருத் திக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போய்விடலாம்.

"அந்த வகையில் எனக்கு திருப்தி உள்ளது. என் தரப்பில் இருந்த சில தவறுகளைத் திருத்திக்கொண்டேன். தொடர்ந்து என் நடிப்பால் ரசிகர்களை மகிழ்விப்பேன்," என்கிறார் கிருஷ்ணா.