'மக்கள் செல்வி' பட்டத்தை அன்புக்காக ஏற்றுக்கொண்டேன்

'மக்கள் செல்வி' பட்டத்தை அன்புக்காக ஏற்றுக்கொண்டேன்

3 mins read
4a7ae7ca-42b2-4676-a235-f757885eacd7
மக­ளிர் பிரச்­சி­னை­க­ளுக்­காக உதவ 'சேவ் சக்தி' என்­கிற அமைப்பை நிறுவி உதவி வரும் வர­லட்­சுமி, அண்­மை­யில் சொந்த மாநி­லத்­துக்கு ரயி­லில் சென்ற தொழி­லா­ளர்­க­ளுக்கு, தன் அமைப்­பின் மூலம் சோறும் நீரும் வழங்­கி­னார். படம்: ஊடகம் -

'மக்­கள்­செல்வி' என சினிமா வட்­டா­ரங்­களில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் வர­லட்­சுமி சரத்­கு­மார், தான் ஏற்­கிற கதா­பாத்­தி­ரங்­க­ளைப் போல துணிச்­ச­லா­ன­வர். மன­தில் பட்­டதை பட்­டென்று பேசி­வி­டு­ப­வர் என்­கி­றார்­கள் அவரை நன்கு அறிந்­த­வர்­கள்.

சமூ­கத்­தின் அழ­கிய நிகழ்­வு­களை மன­முவந்து பாராட்­டும் 'வரு' என்ற வர­லட்­சுமி சரத்­கு­மார், சமூக அவ­லங்­களை கடு­மை­யாக விமர்­சிக்­க­வும் தயங்­கு­வ­தில்லை.

இதற்­கான அண்­மைய உதா­ர­ண­மாக, தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்டை மாவட்­டத்­தில் ஒரு சிறுமி பாலி­யல் துன்­பு­றுத்­த­லால் கொல்­லப்­பட்ட நிகழ்­வுக்கு கண்­ட­னத்தை தெரி­வித்­த­தோடு, "நாமெல்­லாம் கொரோனா வந்­து சாக தகு­தி­யு­டை­யவர்கள்­தான்" என தன் ஆத்தி­ரத்­தை­யும் வெளிப்­ப­டுத்­தி­னார்.

மக­ளிர் பிரச்­சி­னை­க­ளுக்­காக உதவ 'சேவ் சக்தி' என்­கிற அமைப்பை நிறுவி உதவி வரும் வர­லட்­சுமி, அண்­மை­யில் சொந்த மாநி­லத்­துக்கு ரயி­லில் சென்ற தொழி­லா­ளர்­க­ளுக்கு, தன் அமைப்­பின் மூலம் சோறும் நீரும் வழங்­கி­னார்.

"அர­சாங்­கத்தை மட்­டுமே குறை­சொல்­லக்­கூ­டாது. மக்­களும் சுய­மு­யற்­சி­யோடு இருந்­தால்­தான் கொரோனா உள்­ளிட்ட விஷ­யங்­களில் வெற்­றி­காண முடி­யும்," என்­கிற நடை­முறை யதார்த்­தத்­தை­யும் அப்­போது சுட்­டிக்­காட்­டி­னார் வரு.

இப்­படி சமூக சேவை­யில் முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக் கொள்­வ­து­டன் சில புதிய முயற்­சி­க­ளை­யும் இவர் சொந்த வாழ்­வில் மேற்­கொள்­கி­றார். மக்­க­ளுக்கு தேவை­யான உத­வி­க­ளைச் செய்ய போது­மான நிதி வேண்­டுமே?

அதற்­காக சினி­மா­வில் சம்­பா­திப்­பது போக, நவீன பேக்­கரி ஒன்றை தொடங்கி இருக்­கி­றார். மிக விலை­யு­யர்ந்த இந்த பேக்­க­ரி­யின் கேக்­கு­களை முன்­கூட்­டியே ஆர்­டர் செய்து மட்­டுமே பெற முடி­யும். இப்­படி பம்­ப­ர­மாக இயங்­கிக் கொண்­டி­ருக்­கும் வர­லட்­சுமியின் நடிப்­பில் விரை­வில் வெளி­யீடு காண்­கிறது 'டேனி' திரைப்­ப­டம்.

தஞ்­சா­வூர் கிரா­மம் ஒன்­றில் இயங்­கும் காவல் நிலை­யம்­தான் 'டேனி' படத்­தின் கதைக்­க­ளம். அங்கு நடந்த ஒரு கொலை­யைத் துப்­ப­றி­யும் காவல்­துறை அதி­கா­ரி­யாக வர­லட்­சுமி நடித்­துள்­ளார். அவ­ரு­டன் 'பிங்கி' என்ற நாயும் முக்­கி­ய­ கதா­பாத்­தி­ர­மாக நடித்­துள்­ளது. அந்த நாயின் பெயர்­தான் டேனி.

இந்த வழக்கை விசா­ரிக்­கும்போது வரும் இடைஞ்­சல்­களை எல்­லாம் சமா­ளித்து, குற்­ற­வாளி யார் என்­பதை வரு கண்­டு­பி­டிப்­ப­து­தான் கதை.

இப்­ப­டத்­தில் நாய்க்­குட்­டி­யு­டன் நடித்­த­து­தான் தமக்கு மிக­வும் பிடித்த விஷ­யம் என்­கி்­றார் வர­லட்­சுமி. இது மிக அழ­கான கதை என்­றும் தேவை­யின்றி எந்­த­வொரு அம்­ச­மும் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்­றும் பாராட்­டு­கி­றார்.

"ஒரு காட்­சி­யைக் கூட இது தேவை­யற்­றது, நன்­றாக இல்லை என யாரும் விமர்­சிக்க இய­லாது. அந்­த­ளவு நேர்த்­தி­யாக பட­மாக்கி உள்­ளார் இயக்­குநர்.

"படப்­பி­டிப்பு தளத்­தில் டேனி­யைப் பார்த்த உட­னேயே அதைக் கட்­டி­ய­ணைத்­தேன். அந்­த­ளவு ஈர்த்­து­விட்­டது. அதன் மீது அள­வு­க­டந்த பாசம் வைத்­து­விட்­டேன். தன்­னு­டைய காட்சி எடுக்­கப்­பட்­ட­தும் அழ­காக அதன் இருக்­கை­யில் அமர்ந்து கொள்­ளும். நமக்கு இது கேமரா, படப்­பி­டிப்பு என்­றெல்­லாம் புரி­யும். ஆனால், டேனியோ பல டேக்­கு­களை வாங்­கா­மல் பயிற்­சி­யா­ளர் என்ன சொல்கி­றாரோ அதைச் சரி­யாக செய்­தது," என்று பாராட்டு­கி­றார் வர­லட்­சுமி.

தமி­ழில் கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்­கள் நிறைய வரு­கி­றதே?

"முன்பு வராது. இப்­போது வரு­கிறது. தமிழ் சினிமா எப்­போ­துமே கொஞ்­சம் பின்­னோக்­கித் தான் இருக்­கும். மாற்­றத்­துக்கு மறுத்­தால் நாம் இன்­னும் பின்­னோக்­கிச் சென்­று­வி­டு­வோம். மாற்றம் வரும்போது நாமும் அதோடு மாற பழ­கிக் கொள்ள வேண்­டும்."

கதா­நா­ய­கர்­க­ளின் படங்கள் நன்றாக வியா­பாரம் ஆகிறது. நாய­கி­க­ளுக்கு அத்­த­கைய முக்­கி­யத்­து­வம் இல்­லையே?

"இதற்­காக யாரை­யும் குற்­றம் சொல்ல முடி­யாது. ஹாலி­வுட், பாலி­வுட்­டில் எல்­லாம் நாய­கியை மையப்­படுத்­திய படம் என்­றெல்­லாம் கிடை­யாது. அங்கு அனைத்­துமே படம்தான்.

'மக்­கள் செல்­வி' பட்­டம் குறித்து?

'மக்கள் செல்வி' என்று கீர்த்தி சுரேஷை அழைத்து வருவதாகச் சொன்னார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, மக்கள் செல்வி என்ற பட்டத்தை யாருமே யாருக்கும் கொடுக்கவில்லை என்று தெரிந்துகொண்டேன். என்னைப் பொறுத்தவரை எனது சினிமா வாழ்க்கையைத் தவிர, பல பேருக்கு உதவி மற்றும் சேவை செய்து வருவதால் மக்கள் செல்வி பட்டத்தை எனக்குப் பல்வேறு அமைப்பினர் இணைந்து கொடுத்தார்கள். அந்த அன்புக்காக இதை ஏற்றுக்கொண்டேன்," என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் பேசுகிறார் வரலட்சுமி.