‘சிகப்பு ரோஜா’வில் கீர்த்தி

கடந்த நான்­கைந்து மாதங்­க­ளாக முடங்­கிக் கிடந்த தமிழ்த் திரை­யு­ல­கம் தற்­போது மெல்ல சுறு­சு­றுப்­ப­டைந்து வரு­கிறது.

இதை­ய­டுத்து புதுப்­ப­டங்­கள் குறித்து புதுப்­பு­துத் தக­வல்­கள் வெளி­யான வண்­ணம் உள்­ளன.

இயக்­கு­நர் பார­தி­ராஜா, தாம் ஏற்­கெ­னவே இயக்­கிய ஒரு படத்தை மறு­ப­திப்பு செய்ய இருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவ­ரது இயக்­கத்­தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து பெரும் வெற்­றி­ய­டைந்தது படம் ‘சிகப்பு ரோஜாக்­கள்’.

கதைப்­படி அழ­க­ழ­கான பெண்­க­ளாகத் தேடிப்­பி­டித்து காத­லிப்­பார் பணக்­கா­ர­ரான பட நாயகன். பின்­னர் அந்­தப் பெண்­களை அவரே கொலை செய்தும் புதைப்­பார். அவர் மனோதத்­துவ ரீதி­யில் பாதிக்­கப்­பட்­ட­வ­ராக கதை­யில் சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில் இப்­படத்­தின் மறு­ப­திப்­பில் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளா­ராம் பார­தி­ராஜா. அதன்­படி கதை நாயகி­தான் அழ­கான ஆண்­க­ளைத் தேடிப்­பிடித்து தன் வலை­யில் விழ­வைத்து பின்­னர் கொலை­யும் செய்­கி­றாள்.

முதல் பாகத்­தை­விட மறு­ப­திப்­பில் திகில் காட்­சி­கள் அதி­க­மாக இருக்­கு­மாம். இந்த மறு­ப­திப்பை பார­தி­ரா­ஜா­வின் மகன் மனோஜ் இயக்­கு­வார் என்று கூறப்­பட்­டது. ஆனால், தாமே இயக்­கு­வது என இப்­போது முடிவு செய்­துள்­ளா­ராம் பார­தி­ராஜா.

இதை­ய­டுத்து கதா­நா­யகி தேர்வு நடை­பெற்று வரு­கிறது. கீர்த்தி சுரேஷ், சமந்தா ஆகிய இரு­வ­ரது பெயர்­கள் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­வ­தாக சில தினங்­க­ளுக்­கு­முன் தக­வல் வெளியானது.

அனு­ப­வம் அதி­கம் என்­ப­தால் சமந்­தா­வை­தான் பார­தி­ராஜா தேர்வு செய்­வார் என்று கூறப்­பட்டு வந்த நிலை­யில், கீர்த்தி சுரே­ஷை­தான் அவர் தேர்வு செய்­துள்­ளா­ராம். ‘நடி­கை­யர் திலகம்’, ‘பெண்­கு­யின்’ ஆகிய இரு படங்­க­ளி­லும் கீர்த்தி­யின் நடிப்பு அவர் மன­தைக் கவர்ந்­ததே இதற்குக் கார­ணம் என்­கி­றார்­கள்.

வணிக அம்­சங்­கள் நிறைந்த படத்­தில் நடிக்க இருப்­பது தமக்கு உற்­சா­க­ம­ளிப்­ப­தாக நெருக்­க­மா­ன­வர்­க­ளி­டம் சொல்­லிக் கொண்­டி­ருக்­கி­றா­ராம் கீர்த்தி சுரேஷ்.

மற்ற கலை­ஞர்­க­ளை­யும் உறுதி செய்­த­பி­றகு பார­தி­ராஜா தரப்­பி­லி­ருந்து அதி­கா­ரபூர்­வத் தக­வல் வெளி­யா­கும் எனத் தெரி­கிறது. அது­வரை வெளி­யா­கும் தக­வல்­களை ரசி­கர்­கள் நம்­பி­விட வேண்­டாம் என்­கி­றார் மனோஜ் பார­தி­ராஜா.

இதற்­கி­டையே அஜித் நடிக்க உள்ள புதுப்­படம் குறித்த தக­வ­லும் கோடம்­பாக்­கத்­தில் உலா வரு­கிறது. இதற்கு முன் வில்­லத்­த­னம் நிறைந்த கதா­பாத்­தி­ரங்­களில் அஜித்­தின் நடிப்பு பெரி­தா­கப் பேசப்­பட்­டது. ‘வாலி’, ‘மங்­காத்தா’ உள்­ளிட்ட படங்­களை இதற்கு உதா­ர­ண­மா­கக் குறிப்­பி­ட­லாம்.

இந்­நி­லை­யில் முன்­னணி இயக்­கு­நர் ஒரு­வர் அதீத வில்­லத்­த­னத்­து­டன் கூடிய ஒரு கதா­பாத்­தி­ரத்தை மைய­மாக வைத்து உரு­வாக்கி உள்ள கதையை அஜித்­தி­டம் சொல்­லி­யி­ருக்­கி­றா­ராம். அது அஜித்­துக்­கும் பிடித்­துப் போனதை அடுத்து அடுத்­தாண்டு பிற்­பா­தி­யில் இப்­ப­டத்­துக்­கான பணி­கள் துவங்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

எனி­னும் இது­கு­றித்த அதி­கா­ரபூர்வ அறி­விப்பு ‘வலிமை’ படத்­தின் படப்­பி­டிப்பு துவங்­கிய பிற­கு­தான் வெளி­யா­கும் என்­கி­றார்­கள்.

அதற்­குள் கதை­யில் மேலும் சில மாற்­றங்­க­ளைச் செய்து ரசி­கர்­க­ளைக் கவ­ரும் சில அம்­சங்­க­ளைச் சேர்க்­கு­மாறு அஜித் கேட்­டுக் கொண்­ட­தா­கத் தக­வல்.

‘ஜோக்­கர்’ ஆங்­கில படம், ஹாலி­வுட் நடி­கர் டிகாப்­ரியோ நடித்­துள்ள ‘தி வுல்ஃப் ஆஃப் வால்ஸ்திரீட்’ ஆகி­யவை அஜித்­துக்­குப் பிடித்­த­மான படங்­கள். இவற்­றின் சாய­லு­டன் சில காட்­சி­களை அமைக்­கு­மா­றும் அஜித் தரப்பு கேட்­டுக் கொண்­ட­தாக தக­வல். இது­போன்ற படங்­கள் தமிழ்த் திரை­யு­ல­கின் போக்கை மாற்­றி­ய­மைக்­கும் வாய்ப்­புள்­ள­தா­கச் சொல்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!