ரசிகர்கள் இல்லாமல் தமது வளர்ச்சி இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
‘அபூர்வ ராகங்கள்’ மூலம் திரையுலகில் கால்பதித்த அவர், தமது திரைப் பயணத்தில் 45 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியீடு கண்டது.
ரஜினியின் திரைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் மோகன்லால், மம்முட்டி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்களுக்கும் திரையுலகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ரஜினி.
“என்னுடைய திரையுலகப் பயணத்தின் 45 ஆண்டுகள் நிறைவுபெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங் களுக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய இதயம் கனிந்த நன்றி. நீங்கள் இல்லாமல் நான் இல்லை,” என ரஜினி தெரிவித்துள்ளார்.