முன்பு போல் தென்னிந்திய நடிகைகள் மத்தியில் போட்டி மனப்பான்மை இல்லை என்பது உண்மைதான் போலிருக்கிறது. நடிகைகள் சமந்தாவும் ராஷ்மிகா மந்தனாவும் ஒரே படத்தில் ஒப்பந்தமாகி இருப்பது இப்படிச் சொல்ல வைக்கிறது.
இருவரும் பிரபல இயக்குநரின் படத்தில் அக்கா, தங்கையாக நடிக்க உள்ளனராம். கதைப்படி அக்கா சமந்தாவுக்கு தங்கை ராஷ்மிகா மீது கொள்ளைப் பிரியமாம்.
இவர்களின் பாசப் பிணைப்பால் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அலசுவதுதான் கதை என்று கூறப்படுகிறது. கதையைக் கேட்டதுமே இரு முன்னணி நடிகைகளும் எந்தவித தயக்கமும் இன்றி கால்ஷீட் கொடுத்துவிட்டதாகத் தகவல்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகாவுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு உள்ளது.
அறிமுகமான வேகத்தில் விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது தமிழிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.