பிரியா ஆனந்த் அதிகம் பேசக்கூடியவர் அல்ல. அதேசமயம் எதையும் வெளிப்படையாகச் சொல்பவர்.
இந்நிலையில் இவர் நடிகர் அதர்வாவை காதலிப்பதாக முதலில் கூறப்பட்டது. பிறகு கௌதம் கார்த்திக்குடன் நெருக்கமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.
இது தொடர்பாக பிரியா விளக்கம் அளித்துள்ளார். குறிப்பிட்ட அந்த இருவருமே தமக்கு நல்ல நண்பர்கள் என அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.
“அதர்வா, கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் எனது காதலர்கள் அல்ல. இதை நாங்கள் மூன்று பேருமே தனித்தனியாக உறுதி செய்து இருக்கிறோம்.
“நான் நன்றாக இருக்கவேண்டும் என்று நண்பர்கள் என்ற முறையில் இருவருமே விரும்புகிறார்கள். அதேபோல் என் நண்பர்கள் இருவரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நல்ல தோழியாக நான் விரும்புகிறேன்,’’ என்கிறார் பிரியா ஆனந்த்.