பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
இதையடுத்து தமது கணவரது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை ரசிகர்கள் நம்பவேண்டாம் என சஞ்சய் தத்தின் மனைவி மான்யதா கேட்டுக் கொண்டுள்ளார்.
“சஞ்சய் எப்போதும் ஒரு போராளியாகவே இருந்து வந்துள்ளார். எங்கள் குடும்பமும் அப்படிப்பட்டதுதான். எதிர்வர இருக்கும் சவால்களைக் கடக்க கடவுள் எங்களை மீண்டும் சோதிப்பதற்காகத் தேர்ந்தெடுத்துள்ளார்,” என்று மான்யதா கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தமது டுவிட்டர் பதிவில், “இது வலி மிகுந்த அனுபவம்தான். எனினும் அதை தாங்கும் சக்தி உங்களுக்கு உண்டு,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் யுவராஜ் சிங்கும் தொண்டையில் உள்ள கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கடந்த 1993ஆம் ஆண்டில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்தும் சிறைவாசம் அனுபவித்தார். விடுதலையான பிறகும் படங்களில் நடித்து வந்த நிலையில் அவரைப் புற்றுநோய் தாக்கியுள்ளது.