'ஓ அந்த நாட்கள்' பாடல்களுக்கு வரவேற்பு

'ஓ அந்த நாட்கள்' பாடல்களுக்கு வரவேற்பு

1 mins read
abc204a7-46d4-4336-99aa-56152fb73ed4
'ஓ அந்த நாட்கள்' நாயகிகள் குஷ்பு, ராதிகா, ஊர்வசி, சுகாசினி. -

இசை­ய­மைப்­பா­ளர் ஜேம்ஸ் வசந்­தன் கதை எழுதி, இசை­ய­மைத்து, இயக்­கி­யுள்ள படம் 'ஓ அந்த நாட்­கள்'.

காத­லுக்­கும் நகைச்­சு­வைக்­கும் முக்­கி­யத்­து­வம் அளித்து உருவாகி­ உள்ள இப்­ப­டத்தை தமிழ், தெலுங்கு, கன்­ன­டம் என மூன்று மொழி­களில் வெளி­யிட திட்­ட­மிட்­டுள்­ள­னர்.

1980களின் நட்­சத்­திர நாய­கி­களான ராதிகா, குஷ்பு, ஊர்­வசி, சுகா­சினி ஆகி­யோர் இதில் நெருங்­கிய தோழி­க­ளாக நடித்­துள்­ள­னர்.

இவர்­க­ளு­டன் ஜித்­தின் ராஜ், லதா ஹெக்டே, ஒய் ஜி மகேந்திரன், சுலக்­‌ஷனா, மனோ­பாலா, பானு­சந்­தர் உள்­ளிட்ட பல­ரும் நடித்­தி­ருக்­கின்­ற­னர். இயக்­கு­நர் சுந்­தர்.சி சிறப்பு வேடத்­தில் வந்து மெரு­கேற்­றுகிறார்.

"முக்­கி­ய­மான காட்­சி­களை ஆஸ்­தி­ரே­லி­யா­வில் பட­மாக்கி உள்­ளோம். கடந்த மே மாதம் படத்­தில் இடம்­பெ­றும் 'மெட்­ராஸ் என்ன.. மெல்­போர்ன் என்ன...' என்ற பாடல் இணை­யத்­தில் வெளி­யி­டப்­பட்­டது. இதற்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் கிடைத்த வர­வேற்பு உற்­சா­கம் அளிக்­கிறது," என்­கி­றார் ஜேம்ஸ் வசந்­தன்.

இதை­ய­டுத்து 'இனி­யொரு தொல்­லை­யும் இல்லை..' என்ற பாடலையும் வெளி­யிட்­டுள்­ள­னர். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.