வெங்கட்: மாற்றங்கள் நிச்சயமாக தொடரும்

வெங்கட்: மாற்றங்கள் நிச்சயமாக தொடரும்

2 mins read
6f9951c7-25f4-4cfa-8a7b-bf29f8d2a33a
'லாக்கப்' படத்தில் வைபவ், வெங்கட் பிரபு. -

திரை­யு­ல­கில் பல்­வேறு மாற்­றங்­கள் நிகழ்ந்து கொண்­டி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார் வெங்­கட் பிரபு.

முன்­னணி இயக்­கு­ந­ராக இருந்­தா­லும் நடிப்பு மீதான ஆர்­வத்­தை­யும் அவ்­வப்­போது வெளிப்­ப­டுத்­து­ப­வர், இப்­போது 'லாக்­கப்' படத்­தி்ல் நடித்­துள்­ளார்.

இப்­ப­டம் இணை­யம் வழி வெளி­யீடு காண்­பது வருத்­த­மாக உள்­ளதா என வெங்­கட் பிர­பு­வி­டம் சிலர் கேட்­டன­ராம். திரை­ய­ரங்­கில் ரசி­கர்­க­ளின் விசில் சத்­தத்­தை­யும் கைத்­தட்­டல்­க­ளை­யும் பார்க்க முடி­யா­தது வருத்­தம் அளித்­தா­லும் உல­கம் முழு­வ­தும் உள்ள தமிழ் ரசி­கர்­களை இப்­ப­டம் விரை­வா­க­வும் பர­வ­லா­க­வும் சென்­ற­டை­வது மகிழ்ச்சி தரு­வ­தா­கச் சொல்­கி­றார் வெங்­கட்.

"இன்­னும் நிறைய மாற்­றங்­க­ளைப் பார்க்­கப் போகி­றோம். மாற்­றம் ஒன்றே மாறா­தது.

முன்பு, இயக்­கு­நர் எஸ்பி.முத்­து­ரா­மன் சார் ஒரே நாளில் இரண்டு படங்­க­ளின் படப்­பி­டிப்­பு­களை நடத்­திச் செல்­வார் என்று கேள்­விப்­பட்­டி­ருக்­கி­றேன்.

"அப்­போது அப்­படி நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெ­னில், அந்­தக் காலத்­தில் அற்­பு­த­மான எழுத்­தா­ளர்­கள் இருந்­த­னர். இயக்­கு­ந­ருக்கு உள்ள சுமையை பெரு­ம­ளவு குறைத்­த­னர்.

"ஆனால் இன்­றைய இளை­யர்­களோ ஒரு கதையை எழு­திய கையோடு அதை வைத்து படம் இயக்க வேண்­டும் என்று முடி­வெ­டுக்­கி­றார்­கள். எனவே வருங்­கா­லத்­தில் எழுத்­தா­ளர்­க­ளுக்­குத்­தான் நல்ல வர­வேற்பு கிடைக்­கும்," என்­கி­றார் வெங்­கட் பிரபு.

ஊர­டங்கு கார­ண­மாக முன்பு போல் விருந்து நிகழ்­வு­களை நடத்த முடி­ய­வில்லை என்ற வருத்­தம் உள்­ளதா?

"யார் சொன்­னது? நேரில் சந்­திக்க முடி­யா­விட்­டா­லும் எங்­க­ளு­டைய நட்­புக்­கு­ழு­வின் விருந்து நிகழ்­வு­கள் இணை­யம் வழி தொடர்ந்து நடந்து வரு­கி­றது.

"என் வீட்­டில் இருந்­த­ப­டியே நண்­பர்­க­ளு­டன் காணொளி வசதி மூலம் பேசிக் கொண்­டி­ருக்­கி­றேன். எல்­லோ­ரும் பேசி முடிக்க பல மணி நேரம் ஆகும். பல கதை­க­ளைப் பேசி மகிழ்­கி­றோம். முந்­தைய விருந்து நிகழ்­வு­க­ளை­விட இந்த இணைய விருந்து ஒரு­வ­கை­யில் சுவா­ர­சி­ய­மா­கத்­தான் உள்­ளது," என்று சொல்­லும் வெங்­கட் பிரபு தற்­போது 'பார்ட்டி' படத்தை இயக்கி உள்­ளார். அடுத்து சிம்பு நடிக்­கும் மாநாடு படத்தை இயக்­கு­கி­றார்.

அதற்­கான வேலை­கள் நடந்து வரு­கின்­றன. ஊர­டங்கு முடிந்த பின்­னர் படப்­பி­டிப்பு தொடங்­கு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது.

'பார்ட்டி' எப்­போது வெளி­யா­கும்?

"இந்­தக் கேள்­விக்­கான பதில் உண்­மை­யா­கவே எனக்­குத் தெரி­ய­வில்லை. டி.சிவா சார்­தான் இந்­தப் படத்தை தயா­ரித்­தார். பணப் பிரச்­சி­னை­கள் உள்­ளன.

"பெரும்­பா­லான காட்­சி­களை ஃபிஜி தீவில்­தான் பட­மாக்­கி­னோம். அந்­நாட்டு அர­சாங்­கத்­து­டன் சிவா சார் இணைந்து செயல்­பட்­டார்.

"ஒரு­சில விஷ­யங்­க­ளைக் கவ­னத்­தில் கொள்ள வேண்­டி­யுள்­ளது. அவை சாத­க­மாக அமைந்­தால் 'பார்ட்டி' திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­கும். நிச்­ச­ய­மாக நண்­பர்­க­ளு­டன் அமர்ந்து ரசித்து, சிரித்து பார்க்­கும் பட­மாக இருக்­கும். பொது­வாக எனது படங்களில் நகைச்­சுவை தூக்­க­லாக இருக்­கும். அந்த வகை­யில் பார்ட்­டி­யும் ரசி­கர்­களை திருப்தி படுத்­தும்," என்­கி­றார் வெங்­கட்.