நிவேதாவின் எதிர்பார்ப்புகள்

நிவேதாவின் எதிர்பார்ப்புகள்

3 mins read
ac3ecbff-e8d9-458c-b32e-78a5f34fbf15
நடிகை நிவேதா தாமஸ் காதல் வயப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் விரை­வில் அவர் திரு­ம­ணம் செய்­து­கொள்ள வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது. படம்: ஊடகம் -

நடி­கை­க­ளி­டம் கேள்வி கேட்­க­லாம் என்று அனு­மதி அளித்­தால், "நீங்­கள் யாரை­யே­னும் காத­லிக்­கி­றீர்­களா? உங்­க­ளுக்கு எப்­போது திரு­ம­ணம்?" என்­ப­து­தான் பெரும்­பா­லான ரசி­கர்­கள் கேட்­கும் கேள்­வி­க­ளாக இருக்­கக்­கூ­டும்.

நடி­கை­க­ளின் திரு­ம­ணம் குறித்த செய்­தி­க­ளை­த்தான் பல ரசி­கர்­கள் ஆர்­வ­மாக படிக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில் இரு பிர­பல நடி­கை­க­ளின் திரு­ம­ணம் குறித்து கோடம்­பாக்­கத்­தில் பேசப்­ப­டு­கிறது.

நடிகை நிவேதா தாமஸ் காதல் வயப்­பட்­டி­ருப்­ப­தா­க­வும் விரை­வில் அவர் திரு­ம­ணம் செய்­து­கொள்ள வாய்ப்­புள்­ள­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

ஆனால், அவர் தரப்­பில் இது உண்­மை­யல்ல என்­கி­றார்­கள்.

தனது வருங்­கால கண­வர் குறித்து பல எதிர்­பார்ப்­பு­கள் இருப்­ப­தா­கச் சொல்­கி­றார் நிவேதா தாமஸ்.

எனி­னும் திரு­ம­ணம் குறித்து தற்­போது யோசிக்­க­வில்­லை­யாம்.

"என்­னைப் பொறுத்­த­வரை வருங்­கால வாழ்க்­கைத் துணை­யாக வரப்­போ­கி­ற­வர் எனக்கு உண்­மை­யாக இருக்­க­வேண்­டும்.

"எந்­தப் பெண்­ணுமே அப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ரைத்­தான் விரும்­பு­வார்.

"நான் அரு­கில் இருக்­கும்­போது ஒரு மாதிரி பேசி­விட்டு நான் இல்­லா­த­போது வேறு மாதிரி பேசு­ப­வர்­களை நான் அறவே புறக்­க­ணித்து விடு­வேன்.

"நண்­பர்­கள், உற­வி­னர்­க­ளுக்கே இது­தான் கதி. அப்­ப­டி­யா­னால், எனக்கு கண­வ­ராக வரப்­போ­கி­ற­வர் எப்­படி இருக்­க­வேண்­டும் என விரும்­பு­வேன் என்­பது உங்­க­ளுக்கு இந்­நே­ரம் புரிந்­தி­ருக்­கும்.

"என்­னு­டைய கண­வர் தனக்­குள்ள பொறுப்­பு­க­ளு­டன் என்­னு­டைய கட­மை­க­ளை­யும் சுமந்து செல்­ப­வ­ராக இருக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றேன். வாழ்க்கை என்­பதே ஒரு­வ­ருக்கு ஒரு­வர் பகிர்ந்து கொள்­வ­து­தான்," என்­கி­றார் நிவேதா தாமஸ்.

பய­ணம் மேற்­கொள்­வது என்­றால் இவ­ருக்கு கொள்ளை ஆசை­யாம். தமது கண­வ­ரும் பய­ணங்­கள் மேற்­கொள்­வ­தில் ஆர்­வ­மாக இருக்­க­வேண்­டும் என விரும்­பு­கி­றா­ராம்.

சமுத்­தி­ர­கனி இயக்­கிய 'போராளி' படம் மூலம் திரை­யு­ல­கில் அறி­மு­க­மா­ன­வர் நிவேதா. பின்­னர் 'ஜில்லா' படத்­தில் விஜய்­யின் தங்­கை­யாக நடித்­தார்.

பின்­னர் தெலுங்கு, மலை­யா­ளப் படங்­களில் கவ­னம் செலுத்தி வந்­த­வர், 'பாப­நா­சம்' படம் வெளி­யாகி சுமார் நான்கு ஆண்­டு­க­ளுக்­குப் பிறகே 'தர்­பார்' மூலம் கோடம்­பாக்­கத்­தில் மறு­பி­ர­வே­சம் செய்­தார்.

அதன்­பி­றகு மேலும் பல தமிழ்ப் படங்­களில் நடிக்­க­வேண்­டும் என்­று­தான் விரும்­பி­னா­ராம். ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக கொரோனா கிருமி முட்­டுக்­கட்டை போட்­டு­விட்­டது.

இந்­நி­லை­யில் சமூக வலைத்­த­ளம் மூலம் ரசி­கர்­க­ளி­டம் உரை­யா­டி­ய­போது பல­ரும் காதல் குறித்­தும் திரு­மண வாழ்க்கை பற்­றி­யும் அதி­க­மான கேள்­வி­கள் எழுப்பி உள்­ள­னர். அவற்­றுக்­குத் தயங்­கா­மல் பதில் அளித்­துள்­ளார் நிவேதா.

எல்­லோ­ருமே வாழ்க்­கை­யில் காத­லிக்க வேண்­டும் எனும் அவ­சி­ய­மில்லை என்று குறிப்­பிட்­டுள்­ள­வர், திரு­ம­ணத்­துக்­கும் இது பொருந்­தும் என்­கி­றார்.

தற்­போது காத­லிக்­கவோ திரு­ம­ணம் செய்­து­கொள்­ளவோ தமக்கு நேர­மில்லை என்­றும் அவை குறித்­துப் பேசு­வ­தற்கு தாம் தயங்­கி­ய­தில்லை என்­றும் கூறு­கி­றார் நிவேதா.

"வித்­தி­யா­ச­மான கதா­பாத்­தி­ரங்­களில் நடிக்­க­வேண்­டும் என்­பதே எனது விருப்­பம். அது­கு­றித்­து­தான் அதி­கம் யோசிக்­கி­றேன். அந்த விருப்­பம் நிறை­வே­று­வ­தற்கு என்­ன­வெல்­லாம் செய்­ய­வேண்­டுமோ அதைச் செய்­யத் தயா­ராக உள்­ளேன்," என்று சொல்­லும் நிவே­தா­வுக்கு எதிர்­கா­லத்­தில் இயக்­கு­ந­ராக வேண்­டும் என்­ப­து­தான் கனவு.

அப்­ப­டி­யொரு வாய்ப்பு அமை­யும்­போது அதைத் தவ­ற­வி­டா­மல் நிச்­ச­யம் பயன்­ப­டுத்­திக் கொள்­வா­ராம்.

"படம் இயக்­கு­வது சாதா­ரண விஷ­ய­மல்ல என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றேன். சில ஆண்­டு­கள் நடித்­து­விட்­ட­தால் அந்த அனு­ப­வமே ஒரு திரைப்­ப­டத்தை இயக்­கப் போது­மா­னது அல்ல என்­ப­தும் தெரி­யும்.

"எனி­னும் எனது அந்த இலக்கை நோக்கி மெல்ல நடை­போ­டு­கி­றேன். என்­னால் சாதிக்க முடி­யும் எனும் நம்­பிக்கை ஏற்­ப­டும்­போது இயக்­கு­ந­ராக வெளிப்­ப­டு­வேன். அது­வரை காத்­தி­ருப்­பேன்," என்று பக்­கு­வ­மா­கப் பேசு­கி­றார் நிவேதா தாமஸ்.