தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பதற்றமடைந்த மஞ்சிமா

3 mins read
9713ab71-7715-4c89-a62c-cf9d3cbfb909
மஞ்சிமா மோகன் -

கொரோனா ஊர­டங்­கால் கிடைத்­துள்ள ஓய்வு நேரத்­தைப் பயன்­ப­டுத்தி சில உருப்­ப­டி­யான காரி­யங்­க­ளைச் செய்து வரு­கி­றார் நடிகை மஞ்­சிமா மோகன்.

அண்­மைய சில வாரங்­க­ளாக கட்­டட உள் அலங்­கா­ரம் தொடர்­பான இணை­யம் வழி பயிற்சி வகுப்­பில் சேர்ந்து படித்து வரு­கி­றார்.

தின­மும் சில மணி நேரம் நடை­பெ­றும் பயிற்சி வகுப்­பின் முடி­வில் வீட்­டுப் பாடங்­கள் தரப்­ப­டு­கின்­றன. அவற்­றை­யெல்­லாம் சமர்த்­துப் பெண்­ணாக முடித்து நல்ல மாணவி என்று பெய­ரெ­டுத்­துள்­ளா­ராம்.

இந்­தப் பயிற்சி வகுப்பு மீண்­டும் பள்­ளிக்­கூ­டத்­துக்­குச் செல்­லும் உணர்­வை­யும் உற்­சா­கத்­தை­யும் அளித்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

தற்­போது 'எஃப்.ஐ.ஆர்.' 'துக்­ளக் தர்­பார்', 'களத்­தில் சந்­திப்­போம்' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரும் மஞ்­சிமா பல்­வேறு துறை­களில் இளம் திற­மை­சா­லி­களை ஊக்­கு­விக்­கும் வித­மாக தொடங்­கி­யுள்ள 'ஒன் இன் எ மில்­லி­யன்' அமைப்­புக்­கான பணி­க­ளை­யும் ஒரு­சேர கவ­னித்து வரு­கி­றார்.

"உள் அலங்­கா­ரப் பயிற்சி வகுப்­பில் நிறைய திற­மை­சா­லி­க­ளைப் பார்க்க முடி­கிறது.

"அவர்­க­ளு­டைய திறமை பிர­மிக்க வைக்­கிறது. நாமும் ஏதா­வது சாதிக்க வேண்­டும் என்ற எண்­ணத்­து­டன்­தான் இந்­தப் பயிற்­சி­யில் இணைந்­தேன்.

"இப்­போது கிடைத்­துள்ள வாய்ப்­பும் ஓய்­வும் இனி வரும் காலத்­தில் கிடைக்­குமா எனத் தெரி­ய­வில்லை. எனவே, கிடைத்த வாய்ப்பை நல்­ல­வி­த­மா­கப் பயன்­ப­டுத்­து­கி­றேன்.

"இயல்­பா­கவே எனக்கு ஓவி­யம் தீட்­டு­வது பிடிக்­கும். அதை முறைப்­படி கற்­றுக்­கொண்டு செய்­வது போல் இருக்­கிறது இந்­தப் பயிற்சி," என்று சொல்­லும் மஞ்­சிமா, விஜய் சேது­ப­தி­யு­டன் இணைந்து நடிக்க வேண்­டும் என்­பது தமது நீண்­ட­நாள் விருப்­ப­மாக இருந்­தது என்­கி­றார்.

சேது­பதி போல் யதார்த்­த­மாக நடிக்­கக் கூடி­ய­வர்­க­ளு­டன் இணைந்து பணி­யாற்­றும்­போது நிறைய விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள முடி­யும் என்­கி­றார். 'துக்­ளக் தர்­பார்' படத்­தில் இவ­ருக்கு சேது­ப­தி­யின் தங்கை வேட­மாம்.

"சேது­பதி சாரு­டன் இணைந்து நடிப்­பது சவா­லான விஷ­யம். இன்­னும் 15 நாள் படப்­பி­டிப்பு நடக்க வேண்டி உள்­ளது. முக்­கி­ய­மான காட்­சி­கள் எடுக்­கப்­பட உள்­ளன. அதி­லும் சேது­பதி சாரு­டன் இணைந்து நடிக்­கும் காட்­சி­கள்­தான் அதி­கம். அந்த சவா­லான தரு­ணங்­களை எதிர்­கொள்ள ஆவ­லு­டன் காத்­தி­ருக்­கி­றேன்.

"இந்­தப் படத்­தின் படப்­பி­டிப்பு தொடங்­கிய முதல் நாளி­லி­ருந்தே ஒரு­வித பதற்­றம் மன­தில் குடி­கொண்­டி­ருக்­கிறது. கார­ணம், சேது­ப­தி­யு­டன் இணைந்து நடிப்­ப­து­தான். வேறு எந்­தப் படத்­தில் நடித்­த­போ­தும் நான் இவ்­வாறு பதற்­ற­ம­டைந்­த­தில்லை," என்­கி­றார் மஞ்­சிமா.

அண்­மைய சில வாரங்­க­ளாக ஊர­டங்கு வேளை­யில் நிறைய புத்­த­கங்­கள் படித்­தா­ராம். தவிர பல­வி­த­மான ஓவி­யங்­க­ளை­யும் உள் அலங்­கார வரை­ப­டங்­க­ளை­யும் வரைந்து தீர்த்­தா­ராம்.

மஞ்­சி­மா­வுக்­குப் பிடித்த நடிகை வித்­யா­பா­லன். அவ­ரு­டன் இணைந்து நடித்­த­போது பல விஷ­யங்­க­ளைக் கற்­றுக் கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

"வித்யா பால­னி­டம் ஏரா­ள­மான கேள்­வி­க­ளைக் கேட்டு அவரை ஒரு வழி­யாக்கி விட்­டேன். எனி­னும் நான் எழுப்­பிய அனைத்­துக் கேள்­வி­க­ளுக்­கும் பொறு­மை­யாக பதில் சொன்­னார். அதே­ச­ம­யம் என்­னைப் பற்­றி­யும் நிறைய கேட்­டுத் தெரிந்­து­கொண்­டார். அவ­ரது நடிப்பை நேரில் கண்டு ரசிப்­பது அற்­பு­த­மான அனு­ப­வம்.

"அவ­ரி­டம் கேட்­ட­து­போல் மோகன்­லால் சார், விஜய் சார் ஆகி­யோ­ரி­ட­மும் கேட்க வேண்­டிய கேள்­வி­கள் நிறைய உள்­ளன. அதற்­கும் வாய்ப்பு கிடைத்­தால் மகிழ்­வேன்.

"வாழ்க்கை வர­லாற்­றுப் படங்­களில் நடிக்க ஆர்­வமா என்று பல­ரும் கேட்­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்ட வாய்ப்பு கிடைத்­தால் தயக்­க­மின்றி நிச்­ச­யம் ஏற்­றுக்­கொள்­வேன்," என்­கி­றார் மஞ்சிமா மோகன்.