ஒரு படத்தின் தலைப்பால் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் கடும் கோபத்தில் இருக்கிறாராம். 'காதம்பரி' என்பதுதான் அந்தத் தலைப்பு.
அருள் என்பவர் நாயகனாக நடித்து தாமே இயக்கி தயாரித்துள்ள படம் இது. காசிமா நாயகியாக நடித்துள்ளார். முழுக்க புதுமுகங்களைக் கொண்டு உருவாகியுள்ளது இப்படம்.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற 'நானும் ரவுடிதான்' படத்தில் நயன்தாராவின் பெயர்தான் காதம்பரி. குறைந்த செலவில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார்.
படம் பெரிய அளவில் பேசப்பட்டது. வசூல் ரீதியிலும் வெற்றி கண்டது. இதனால் 'காதம்பரி' என்ற தலைப்பில் புதுப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்.
இந்நிலையில் அந்தத் தலைப்பை வேறொருவர் பயன்படுத்துவதால் ஏமாற்றமடைந்துள்ளார். அதுமட்டுமல்ல, 'காதம்பரி' படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிடுமாறு கேட்டு புதுமுகம் அருள் தரப்பு இவரை அணுகியபோது முடியாது எனக் கோபத்துடன் மறுத்துவிட்டாராம்.
இந்நிலையில் ஒருசிலர் விக்னேஷ் சிவனுக்காக தலைப்பை விட்டுக் கொடுக்குமாறு அருளிடம் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அவரோ படத்தை வெளியிடும் தருணம் நெருங்கியுள்ள நிலையில் தலைப்பை மாற்ற வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தகவல்.

