அணுகுமுறையை மாற்றிக்கொண்ட கலைஞர்கள்

அணுகுமுறையை மாற்றிக்கொண்ட கலைஞர்கள்

3 mins read
23d9a1b6-d8c8-438a-99f8-c487640b42ef
ராஷி கன்னா, மாளவிகா மேனன், விஜய். படங்கள் ஊடகம் -

கொரோனா ஊர­டங்­கின்­போது முன்­னணி நடி­கர், நடி­கை­யர் மிக­வும் விவ­ர­மா­ன­வர்­க­ளாக மாறி­விட்­ட­னர்.

படங்­க­ளைத் தேர்வு செய்­வது, கால்­ஷீட் ஒதுக்­கு­வது, அதற்­கேற்ற சம்­ப­ளத்­தைத் தீர்­மா­னிப்­பது என்று அனைத்து வகை­யி­லும் முன்­ன­ணிக் கலை­ஞர்­க­ளின் அணு­கு­மு­றை­யில் பெரிய மாற்­றம் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கோடம்­பாக்க விவ­ரப்­புள்­ளி­கள் கூறு­கின்­ற­னர்.

இவ்­வாறு தங்­கள் அணு­கு­மு­றையை மாற்­றிக்­கொண்­ட­வர்­க­ளைப் பற்றி பார்ப்­போம்.

நடிகை ராஷி கன்னா இப்­போ­தெல்­லாம் சம்­ப­ளம் குறித்து பெரி­தாக அலட்­டிக் கொள்­வ­தில்­லை­யாம். நல்ல கதா­பாத்­தி­ரம் இருந்­தால் சம்­ப­ள­மும் கால்­ஷீட்­டும் ஒரு பொருட்டே அல்ல என்­கி­றார்.

"பத்து கோடி கொடுப்­ப­தாக இருந்­தா­லும் கதை நன்­றாக இல்லை என்­றால் நிச்­ச­யம் நடிக்­க­மாட்­டேன். அதே­ச­ம­யம் நல்ல கதை என்­றால் குறை­வான சம்­ப­ளம் என்­றா­லும் என்னை அந்­தப் படத்­தில் பார்க்க முடி­யும். கலை­ஞர்­க­ளுக்கு ஆத்­ம­தி­ருப்­தி­தான் முக்­கி­யம்," என்­கி­றார் ராஷி கன்னா.

பிறகு ஏன் தோல்­விப் படங்­க­ளி­லும் நடித்­தி­ருக்­கி­றீர்­கள் என்று சிலர் கேட்­ப­தற்கு இவ­ரி­டம் பதில் உள்­ளது. வெற்றி தோல்வி என்­பது நம் கையில் இல்லை என்­கி­றார். கதை தேர்வு செய்­வது மட்­டுமே நம் கையில் இருக்­கிறது என்று குறிப்­பி­டு­ப­வர், ரசி­கர்­கள் என்ன முடி­வெ­டுப்­பார்­கள்? என்­பது நமக்கு முன்­கூட்­டியே தெரி­யாது என்று சுட்­டிக் காட்­டு­கி­றார்.

அண்­மை­யில் நீச்­சல் உடை படங்­களை வெளி­யிட்டு ரசி­கர்­க­ளைக் கிறங்­க­டித்த மாள­விகா மோக­னன் அடுத்து தனு­சு­டன் நடிக்க இருப்­ப­தா­கத் தக­வல்.

கார்த்­திக் நரேன் இயக்­கும் இந்­தப் படத்­தில் நடிப்­ப­தற்­கான பேச்­சு­வார்த்தை கிட்­டத்­தட்ட முடிந்­து­விட்­ட­தாம்.

எனி­னும் 'மாஸ்­டர்' படத்­தில் நடித்­து­விட்­ட­தால் மாள­விகா தரப்­பில் அதிக சம்­ப­ளம் கேட்­கப்­ப­டு­வ­தா­கத் தக­வல். அத­னால் தயா­ரிப்­புத் தரப்பு தயங்­கு­வ­தா­க­வும் ஒரு­வேளை ஏதே­னும் ஒரு தரப்பு இறங்கி வந்­தால் ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தா­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது.

அதி­தி­ராவ் அதி­கம் அலட்­டிக்­கொள்­ளாத கதா­நா­யகி. கதை பிடித்­துப் போனால் கால்­ஷீட்டை அள்­ளிக் கொடுப்­பார்.

தற்­போது தமி­ழில் விஜய் சேது­ப­தி­யு­டன் 'துக்­ளக் தர்­பார்', துல்­கர் சல்­மா­னு­டன் 'ஹே சினா­மிகா' உள்­ளிட்ட படங்­களில் நடித்து வரு­கி­றார் அதிதி. அடுத்து ஜிவி. பிர­கா­சு­டன் ஒரு படத்­தில் ஒப்­பந்­தம் ஆகி­யுள்­ளா­ராம். இப்­ப­டத்தை அறி­முக இயக்­கு­நர் பிர­சாந்த் இயக்­கு­கி­றார்.

தமி­ழில் நடிக்க அதிக சம்­ப­ளம் கேட்­பார் என்று கூறப்­பட்ட நிலை­யில் கதை பிடித்­துப் போன­தால் புது இயக்­கு­நர் என்­றா­லும் கணி­ச­மாக குறைத்­துக் கொண்­டா­ராம் அதிதி. இது­கு­றித்து சமூக வலைத்­த­ளத்­தில் ரசி­க­ர் ஒரு­வர் கேள்வி எழுப்ப, அதிதி தெரி­வித்த பதில் பல­ரால் பாராட்­டப்­ப­டு­கிறது.

"சினிமா என்­பது கூட்டு முயற்சி. கொரோனா விவ­கா­ரத்­தால் அனை­வ­ரும் படா­த­பாடு படு­கி­றோம். அனைத்­துத் தொழில் துறை­யும் முடங்­கி­யுள்ள நிலை­யில் சினிமா தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு மட்­டும் எங்­கி­ருந்து பணம் வரும்? தயா­ரிப்­பா­ளர்­கள் இல்லை என்­றால் சினி­மாவே இல்லை. இதைப் புரிந்து கொண்­டால் எந்­தச் சிக்­க­லும் இல்லை," என்­கி­றார் அதி­தி­ராவ்.

'மாஸ்­டர்' படம் வெளி­யா­கா­விட்­டா­லும் அடுத்­த­டுத்த படங்­களில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் விஜய்.

பொது­வாக இவ­ரது படங்­க­ளுக்­கான பட்­ஜெட் அதி­க­ரித்­துக் கொண்டே போகும். அதற்­கேற்­ப­தான் கதை­க­ளை­யும் தேர்வு செய்­வார்.

'மாஸ்­டர்' படத்­தின் வியா­பார அள­வும் அதன் வெற்றி தோல்வி குறித்­தும் யாரா­லும் இன்­னும் தீர்­மா­னிக்க முடி­ய­வில்லை. இந்­நி­லை­யில் அடுத்து சன் பிக்­சர்ஸ் தயா­ரிக்­கும், 'தள­பதி 65' என்று குறிப்­பி­டப்­படும் படத்தை ஏ.ஆர். முரு­க­தாஸ் இயக்­கு­வது உறு­தி­யாகி உள்­ளது. இப்­ப­டத்­தின் பட்­ஜெட் 130 கோடி­யாம்.

எனவே, விஜய்­யின் சம்­ப­ளம் என்ன என்­பதை ஓர­ளவு யூகிக்க முடி­யும். 'மாஸ்­டர்' வெளி­யான பின் இருக்­கும் நில­வ­ரத்­துக்கு ஏற்ப சில­வற்றை மாற்றி அமைத்­துக் கொள்­ள­லாம் என்று தயா­ரிப்­புத் தரப்­பி­டம் விஜய் உறுதி அளித்­தி­ருப்­ப­தா­கத் தக­வல். இத­னால் சன் பிக்­சர்ஸ் தரப்­பும் உற்­சா­க­ம­டைந்­துள்­ள­தாம்.

'ஜாம்பி' படத்­துக்­குப் பிறகு நடி­கர் மகத்­து­டன் 'இவன்­தான் உத்­த­மன்' படத்­தில் நடித்த யாஷிகா ஆனந்த் ஆரவ் நடித்­துள்ள 'ராஜ­பீமா' படத்­தில் ஒரு பாட­லுக்கு மட்­டும் நட­னம் ஆடி­னார்.

இந்­நி­லை­யில் தம்பி ராமை­யா­வின் மகன் உமா­பதி நடிக்­கும் 'சிறுத்தை சிவா' படத்­தி­லும் இவரை ஒப்­பந்­தம் செய்­த­னர். 'பிக்­பாஸ்' தந்த புக­ழால் சகட்­டு­மே­னிக்கு சம்­ப­ளம் கேட்ட யாஷி­கா­வுக்கு கொரோனா ஊர­டங்கு வேளை­யில் புது வாய்ப்­பு­கள் ஏதும் தேடி­வ­ர­வில்லை. இதை­ய­டுத்து சுதா­ரித்­துக்­கொண்ட அவர், தனது சம்­ப­ளத்­தைக் குறைத்­துக் கொள்­வ­தாக கூறி­யுள்­ளா­ராம்.

இந்த அறி­விப்­பால் கவரப்­பட்ட சில தயா­ரிப்­பா­ளர்­கள் ஒற்­றைப் பாட­லுக்கு நட­ன­மா­டும்­படி கேட்டு அணு­கி­னார்­க­ளாம். ஆனால், யாஷிகா அதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை.

"இப்­போது வாய்ப்­புக் கிடைக்­கிறது என சம்­ம­தித்­தால் பிறகு தன்னை கவர்ச்சி நட­னக்­க­லை­ஞ­ரா­கவே மாற்றி விடு­வார்­கள்," என்­ப­து­தான் யாஷி­கா­வின் புறக்கணிப்புக்கு கார­ண­மாம்.