தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மனோ­ரமா கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை

3 mins read
26505e27-344f-498e-baaa-e17ad49e6a2f
ஐஸ்வர்யா ராஜே‌ஷ் -

ஐஸ்­வர்யா ராஜேஷ் நடிக்­கும் 25ஆவது படம் 'பூமிகா'. ரதீந்­தி­ரன் பிர­சாத் இயக்­கு­கி­றார்.

படம் குறித்த அறி­விப்பு வெளி­யான உட­னேயே திரை­ய­ரங்­கு­களில் வெளி­யா­குமா அல்­லது நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டப்­ப­டுமா? என்று கேட்­கி­றார்­க­ளாம்.

இன்­னும் அது­கு­றித்­தெல்­லாம் முடி­வெ­டுக்­க­வில்லை என்று சொல்­லும் ரதீந்­தி­ரன் பிர­சாத், முத­லில் படத்­தைத் திட்­ட­மிட்­ட­படி எடுத்து முடிப்­ப­தில்­தான் முழு சிந்­த­னை­யும் இருப்­ப­தா­கக் கூறு­கி­றார்.

எனி­னும் சூழ்­நிலை சரி­யாக அமை­யும் பட்­சத்­தில் எந்த ஒரு படைப்­பா­ளி­யும் தனது படைப்­பைத் திரை­ய­ரங்­கில் வெளி­யி­டவே விரும்­பு­வார் என்­கி­றார்.

இந்­நி­லை­யில் வித்­தி­யா­ச­மான கதைக்­க­ளத்­தில் நடிப்­பது உற்­சா­கம் அளிப்­ப­தாக சொல்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

முதன்­மு­றை­யாக இப்­ப­டத்­தில் மன­நல மருத்­து­வ­ராக நடித்­துள்­ளா­ராம்.

பர­ப­ரப்­பான ஒரு நக­ரின் மையப்­ப­கு­தி­யில் புதி­தாக ஒரு கட்­ட­டத்­தைக் கட்டி முடிக்­கும் பணி­யில் கட்­ட­டக்­கலை நிபு­ணர்­கள் ஈடு­ப­டு­கின்­ற­னர். ஆனால், பத்­தாண்­டு­க­ளா­கி­யும் அந்­தப் பணி­மு­டி­வ­டை­யா­மல் இழுத்­த­டிக்­கிறது.

இதற்­கி­டையே இந்­தப் பணிக்­குப் பொறுப்­பேற்­கும் நிபு­ணர்­கள் அடுத்­த­டுத்து கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள். இந்த விவ­கா­ரம் மனநல நிபு­ண­ரான ஐஸ்­வர்­யா­வின் காது­க­ளுக்கு வந்து சேரு­கிறது.

இது தொடர்­பாக அவ­ரது உத­வி­யைக் கோரு­கி­றார் அவ­ரது கண­வர். இதை­ய­டுத்து கட்ட­டப் பணி­யில் நில­வும் மர்­மத்தை துப்­ப­றிந்து பிரச்­சி­னை­யைத் தீர்த்து வைக்­கி­றார் ஐஸ்­வர்யா.

"இது எனக்கு 25ஆவது படம். கன­மான கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றுள்­ளேன். இயக்­கு­நர் ரதீந்­தி­ரன் நல்ல நண்­பர். மேலும் திற­மை­யான இயக்­கு­நர். பொது­வாக கதை­யும் எனக்­கான கதா­பாத்­தி­ர­மும் பிடித்­தி­ருந்­தால் மட்­டுமே நடிக்க சம்­ம­திக்­கி­றேன்.

"அப்­படி ஏற்­றுக்­கொண்ட அந்­தப் படங்­களை 'பூமிகா'வும் ஒன்று. இதில் ஏற்றுள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ப நடித்திருப்பது திருப்தி அளிக்கிறது," என்­கி­றார் ஐஸ்­வர்யா.

இப்­ப­டத்­தின் படப்­பி­டிப்பு முழு­வ­தும் ஊட்­டி­யில் நடை­பெற்­ற­தாம். 35 நாட்­கள் இரவு பக­லாக உழைத்து படப்­பி­டிப்பை முடித்­துள்­ள­னர்.

அடுத்து இவர் சரித்­தி­ரப் படம் ஒன்­றில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம். மேலும் பிர­ப­லங்­க­ளின் வாழ்க்­கையை முழு­மை­யா­கப் படம் பிடித்­துக் காட்­டும் வாழ்க்கை வர­லாற்­றுப் படத்­தில் நடிக்­க­வேண்­டும் என்­றும் ஆசைப்­ப­டு­கி­றார்.

"இது­வரை என் மன­தில் உள்ள நீண்ட நாள் ஆசை ஒன்றை நான் வெளிப்­ப­டுத்­தி­யதே இல்லை. இப்­போது அதற்­கான நேரம் வந்­துள்­ளது. கார­ணம், எனக்­கு­ரிய ஒரு கதா­பாத்­தி­ரத்­தைத் தேர்வு செய்­யும் அள­வுக்கு நான் பக்­கு­வ­மான நடி­கை­யாகி விட்­ட­தாக உணர்­கி­றேன்.

"நடிகை ஆச்சி மனோ­ரமா கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க வேண்­டும் என்­பதே எனது ஆசை. அந்­தப் படத்­தின் மூலம் இந்­திய திரைப்­பட தேசிய விரு­தைப் பெற­வேண்­டும் என்­றும் விரும்­பு­கி­றேன். இந்த ஆசை நிறை­வேறி விரு­தும் கிடைத்­தால் அதை­விட என் வாழ்க்­கை­யில் மகிழ்ச்­சி­யான தரு­ணம் இருக்க முடி­யாது.

"இப்­ப­டி­யொரு வாய்ப்பு நிச்­ச­ய­மாக கூடிய விரை­வில் அமை­யும் என நம்­பு­கி­றேன். அதற்­கா­கக் காத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

சக நடி­கர், நடி­கை­க­ளின் திற­மையை மெச்­சு­வ­தி­லும் அவர்­கள் நடிக்­கும் படங்­கள் நன்­றாக இருந்­தால் பாராட்டி மெச்­சு­வ­தை­யும் வழக்­க­மா­கக் கொண்­டுள்­ளார் இவர்.

அந்த வகை­யில் விஜய் சேது­ப­தி­யும் ஷ்ரு­தி­ஹா­ச­னும் இணைந்து நடித்­துள்ள 'லாபம்' படம் வெற்­றி­ய­டைய வாழ்த்து தெரி­வித்­துள்­ளார்.

"சேது­ப­தி­யும் ஷ்ரு­தி­யும் எனது நட்பு வட்­டத்­தில் உள்ள நல்ல நண்­பர்­கள். ஜன­நா­தன் சார் இயக்­கும் படங்­கள் எப்­படி இருக்­கும் என்­பது அனை­வ­ருக்­கும் தெரி­யும்.

"இந்­தக் குழு நிச்­ச­யம் தர­மான படைப்பை வழங்­கும். இந்­தப் படம் வெற்­றி­ய­டைய வாழ்த்­து­கள்," என்று இன்ஸ்­ட­கி­ரா­மில் குறிப்­பிட்­டுள்­ளார் ஐஸ்­வர்யா.