மீண்டும் நடிக்க தயாராகும் சந்தியா

2 mins read
dcc94f7f-ca4a-467e-95a6-35c62996ce5a
நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தனது திறமையை நிரூபிக்கத் தயார் என்கிறார் சந்தியா. கோப்புப்படம்: ஊடகம் -

'காதல்' சந்­தியா திரைப்­ப­டத்­தில் நடித்து நான்­கைந்து ஆண்­டு­க­ளாகி விட்­டன. ஒரு குழந்­தைக்­குத் தாயான நிலை­யில் கோடம்­பாக்­கத்­தில் மறு­பி­ர­வே­சம் செய்­யத் தயா­ராக இருப்­ப­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

சினி­மா­வில் தமது முதல் சுற்­றில் அதி­கம் சாதிக்க முடி­ய­வில்லை என்ற வருத்­தம் இன்­ற­ள­வும் இருப்­ப­தாக பேட்டி ஒன்­றில் குறிப்­பிட்­டுள்ள அவர், தாம் எடுத்த சில தவ­றான முடி­வு­கள் பின்­ன­டைவை ஏற்படுத்தி விட்­ட­தாக ஒப்­புக்கொள்­கி­றார்.

'சுப்­பி­ர­ம­ணி­ய­பு­ரம்' படத்­தில் நாய­கி­யாக நடிக்­கக் கேட்டு இயக்­கு­நர் சசி­கு­மார் இவ­ரைத்­தான் முத­லில் அணு­கி­னா­ராம். ஆனால், அறி­முக இயக்­கு­ந­ரின் படத்­தில் நடிக்­க தயங்­கிய சந்­தியா மறுத்­து­விட்­டார்.

"சுவாதி நடித்த கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க முடி­யலாமல் போன­தற்­காக இப்­போ­தும் வருந்­து­கி­றேன். சசி­கு­மார் சார் தேடி வந்து கதை­யைச் சொன்­னார். எனக்­கும் பிடித்­தி­ருந்­தது. எனி­னும் தயங்­கி­னேன்.

"வாய்ப்பை ஏற்க மறுத்­த­தால் சசி­கு­மார் சாருக்கு என் மீது கோபம், வருத்­தம் இருந்­தி­ருக்­கும். அவர் மன­தைக் காயப்­ப­டுத்தி இருந்­தால் அதற்­காக மனதார மன்­னிப்­புக் கேட்­டுக்­கொள்­கி­றேன்," என்று சொல்­லும் சந்­தியா, 16 வய­தில் 'காதல்' படம் மூலம் சினிமா உல­கில் அடி­யெ­டுத்து வைத்­த­வர்.

இவ­ரது இயற்­பெ­யர் ரேவதி. அந்­தப் பெய­ரில் ஏற்­கெ­னவே ஒரு பிர­பல நடிகை இருப்­ப­தால், சந்தியா என்று பெயரை மாற்­றிக்­கொள்­வோம் என்று 'காதல்' இயக்­கு­நர் பாலாஜி சக்­தி­வேல் கூற அதை ஏற்­றுக்­கொண்­டுள்­ளார்.

"பின்­னர் ஒரு­நாள் 'காதல்' படத்­தைத் தயா­ரித்த இயக்­கு­நர் சங்­கர் வீட்­டுக்­குச் சென்­றி­ருந்­தோம் அப்­போது சங்­கர் சாரின் மனைவி சந்­தியா என்­பது அவ­ருக்­குப் பிடித்­த­மான பெயர் என்­றும் தாங்­கள் தயா­ரிக்­கும் முதல் படத்­தில் அறி­மு­க­மா­கும் நாயகி என்­ப­தால் எனக்கு அந்­தப் பெய­ரைச் சூட்­டி­ய­தா­க­வும் விவ­ரித்­தார்.

"அப்­போ­து­தான் சந்­தியா என்ற பெயரை அவர் பரிந்­துரை செய்­தார் என்­பதே எனக்­குத் தெரி­ய­வந்­தது," என்று சொல்­லும் 'காதல்' சந்­தியா தமிழ், தெலுங்கு, மலை­யா­ளம், கன்­ன­டம் ஆகிய நான்கு மொழி­க­ளி­லும் நடித்­துள்­ளார்.

இம்­மொ­ழி­களில் அறி­மு­கப் படங்­கள் வெற்றி பெற்­றா­லும் அடுத்­த­டுத்த படங்­கள் பெரி­தா­கப் பேசப்­ப­ட­வில்லை. இளம் வய­தி­லேயே நடிக்க வந்­த­தா­லும் இவ­ரது பெற்­றோ­ருக்­கும் சினி­மா­வுக்­கும் அறவே தொடர்­பில்லை என்­ப­தா­லும் சில சம­யங்­களில் சரி­யாக முடி­வெ­டுக்க முடி­யா­மல் போன­தா­கச் சொல்­கி­றார்.

அப்­ப­டிப்­பட்ட ஒரு தவ­று­தான் 'சுப்­பி­ர­ம­ணி­ய­புரம்' படத்­தில் நடிக்க மறுத்­தது என்­கி­றார்.

சினி­மா­வில் வாய்ப்­பு­கள் குறைந்த பிறகு சின்னத்­திரை தொடர்­களில் நடிக்­கத் துவங்­கிய சந்­தியா, திரு­ம­ணத்­துக்­குப் பிறகு சினிமா பக்கம் எட்­டிப்­பார்க்­கவே இல்லை. இந்­நி­லை­யில் திரைப்­படங்­கள், இணை­யத் தொடர்­களில் நடிக்க விரும்­பு­கி­றா­ராம்.

நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் தனது திறமையை நிரூபிக்கத் தயார் என்கிறார்.