படத்தின் லாபத்தில் நிதி வழங்கிய சூர்யா

படத்தின் லாபத்தில் நிதி வழங்கிய சூர்யா

1 mins read
15cc2d62-4411-463f-b27c-4d346359f99b
'சூரரைப் போற்று' படத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி. -

'சூர­ரைப் போற்று' படத்­தின் மூலம் கிடைத்த லாபத்­தில் திரை­யு­ல­கத்­தி­ன­ருக்கு 1.5 கோடி ரூபாய் நிதி அளித்­துள்­ளார் சூர்யா. இப்­ப­டம் வரும் அக்­டோ­பர் 30ஆம் தேதி நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யாக உள்­ளது.

திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள், விநி­யோ­கிப்பாளர்­கள் இதற்கு கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர். இப்­ப­டத்­தின் மூலம் கிடைக்­கும் லாபத்­தில் 5 கோடி ரூபாய் தேவை உள்­ள­வர்­க­ளுக்­குப் பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்று சூர்யா அறி­வித்­தி­ருந்­தார்.

அதன்­படி திரைப்­ப­டத் தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­திற்கு ஒரு கோடி ரூபா­யும் தமிழ்த் திரைப்­படத் தயா­ரிப்­பாளர் சங்­கத்­துக்கு 30 லட்­சம் ரூபா­யும் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் தென்­னிந்­திய நடி­கர் சங்­கத்­துக்­கும் 20 லட்­சம் ரூபாய் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கான நிகழ்­வுக்கு இயக்­கு­நர் பார­தி­ராஜா தலைமை ஏற்க, நடி­கர் சிவ­கு­மார் முன்­னிலை வகித்­தார். மீத­முள்ள தொகை எவ்­வாறு பகிர்ந்­த­ளிக்­கப்­படும் என்­பது குறித்து விரை­வில் அறி­விக்­கப்­படும் என சூர்யா தரப்பு தெரி­வித்­துள்­ளது.

தமி­ழில் ஒரு திரைப்­ப­டம் வெளி­யா­கும் முன்பே அதன் லாபத்­தின் ஒரு பகு­தி­யைக் கொண்டு இவ்­வாறு நிதி­ய­ளிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் முறை.

அந்த வகை­யில் 'சூர­ரைப் போற்று' தமிழ் சினி­மா­வின் முக்­கி­ய­மான படங்­களில் ஒன்­றாக மாறி­யுள்­ளது என்று பல­ரும் பாராட்­டுத் தெரி­வித்­துள்­ள­னர்.

இப்­ப­டத்தை நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டு­வது என்று தைரி­ய­மாக முடி­வெ­டுத்து செயல்­பட்­ட­தற்­காக சூர்­யா­வுக்கு திரை­யு­ல­கைச் சேர்ந்த ஒரு­த­ரப்­பி­னர் பாராட்டு தெரி­வித்­துள்­ள­னர்.