முதலில் 'டாக்டர்'; பிறகு 'அயலான்'

முதலில் 'டாக்டர்'; பிறகு 'அயலான்'

2 mins read
ed9379a4-ea5e-4cba-9f66-c92d0e4ca3e0
சிவகார்த்திகேயன். படம்: ஊடகம் -

ஊர­டங்­கால் திரை­யு­ல­க­மும் முடங்­கி­யுள்­ளது. இது ஒரு வகை­யில் வருத்­தம் அளித்­தா­லும் முன்­னணி நடி­கர், நடி­கை­ய­ரைப் பொறுத்­த­வரை அதி­க­மான கதை­க­ளைக் கேட்டு பல நிறு­வ­னங்­க­ளு­டன் கலந்து பேசி அடுத்த சில ஆண்­டு­க­ளுக்­கான திட்­டங்­களை விரி­வா­கத் தயா­ரிக்க முடிந்­தி­ருப்­பது சாத­க­மான அம்­ச­மா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் நடி­கர் சிவ­கார்த்­தி­கே­யன் அடுத்து தேசிங்கு பெரி­ய­சாமி இயக்­கத்­தில் நடிப்­பது என முடிவு செய்­துள்­ளா­ராம்.

தற்­போது 'டாக்­டர்' படத்­தில் கவ­னம் செலுத்தி வரு­கி­றார் சிவா. மற்­றொ­ரு­பக்­கம் 'அய­லான்' படத்­தி­லும் நடிக்­கி­றார். இந்த இரு படங்­க­ளுமே ஊர­டங்­கால் பாதி­யில் நிற்­கிறது. இரண்­டில் நெல்­சன் திலீப்­கு­மார் இயக்­கும் 'டாக்­டர்'தான் முத­லில் வெளி­யா­கு­மாம்.

ஊர­டங்கு முடி­வுக்கு வந்­த­தும் முத­லில் இந்­தப் படப்­பி­டிப்­பில்­தான் சிவா பங்­கேற்க உள்­ளார். அதன்­பி­ற­கு­தான் 'அய­லான்' பட வேலை­க­ளைத் தொடங்க உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அடுத்த இரு படங்­களில் யாரு­டன் பணி­யாற்­று­வது என்று நீண்ட ஆலோ­ச­னைக்­குப் பிறகு முடிவு செய்­துள்­ளார் சிவா. அவர் தேர்வு செய்­துள்ள முதல் இயக்­கு­நர்­தான் தேசிங்கு பெரி­ய­சாமி.

இவர் துல்­கர் சல்­மான், ரிது­வர்மா நடித்த 'கண்­ணும் கண்­ணும் கொள்­ளை­ய­டித்­தால்' படத்தை இயக்­கி­ய­வர். இந்­தாண்டு துவக்­கத்­தில் வெளி­யாகி இளை­யர்­கள் மத்­தி­யில் நல்ல வர­வேற்­பைப் பெற்­றது இப்­ப­டம். மற்­றும் வசூல் ரீதி­யா­க­வும் எந்­தக் குறை­யும் வைக்­க­வில்லை.

பல்­வேறு தரப்­பி­ன­ரும் இயக்­கு­நர் தேசிங்கு பெரி­ய­சா­மி­யைப் பாராட்­டிய நிலை­யில் நடி­கர் ரஜி­னி­காந்­தும் தொலை­பே­சி­யில் தொடர்­பு­கொண்டு அவ­ருக்கு வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தார். அவர் பேசி­யது தொடர்­பான ஒலிப்­ப­திவு ஒன்று சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி தேசிங்கு பெரி­ய­சா­மியை மேலும் பிர­ப­ல­மாக்கி உள்­ளது. தற்­போது இவ­ரும் சிவா­வும் கூட்­டணி அமைக்க உள்­ள­னர்.

இதற்­கி­டையே அண்­மை­யில் வெளி­யான 'டாக்­டர்' படத்­தின் 'நெஞ்­சமே' என்ற இரண்­டா­வது பாட­லான நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இதற்கு முன்பு அனி­ருத் இசை­ய­மைப்­பில் வெளி­யான 'செல்­லம்மா' என்ற முதல் பாடல் இணை­யத்­தில் வெளி­யாகி இது­வரை 26 மில்­லி­யன் பார்­வை­க­ளைப் பெற்­றுள்­ளது.

பாட­லைப் போலவே பட­மும் நல்ல வர­வேற்­பைப் பெறும் என நம்­பிக்­கை­யு­டன் கூறி­வ­ரும் சிவா அடுத்து பாண்­டி­ராஜ் அல்­லது தனது நண்­பர் அருண்­ராஜா காம­ராஜா இயக்­கத்­தில் நடிக்க வாய்ப்­புள்­ள­தாம். இதை அவ­ரது தரப்பு உறுதி செய்­ய­வில்லை என்­றா­லும் சிவா­வின் ரசி­கர்­கள் சமூக வலைத்­த­ளங்­களில் இது­கு­றித்­துப் பேசி வரு­கி­றார்­கள்.

முன்­னணி நடி­கர் சிவா­வின் நிலை இது­வென்­றால், அறி­முக நடி­க­ரான 'பிக்­பாஸ்' முகேன் ராவும் படங்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் கவ­ன­மாக இருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

'பிக்­பாஸ்' மூன்­றா­வது சீச­னில் வெற்றி பெற்ற கையோடு முகேன் ஒன்­றி­ரண்டு படங்­க­ளி­லா­வது நடிப்­பார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. எனி­னும் அதற்­கான பேச்­சு­வார்த்­தை­கள் நடந்து கொண்­டி­ருந்­த­போது அவ­ரது தந்தை கால­மா­னார்.

அடுத்து கொரோனா ஊர­டங்கு குறுக்­கிட்­டது. இத­னால் அடுத்த கட்­டத்­துக்கு நக­ர­மு­டி­யா­மல் தவித்து வந்­த­வர் தற்­போது பெண் இயக்­கு­நர் அஞ்­சனா அலி­கான் இயக்­கத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மாகி உள்­ளா­ராம். இவர் ஏற்­கெ­னவே நானி, நித்­யா­மே­னன் நடித்த 'வெப்­பம்' படத்தை இயக்­கி­ய­வர்.