நிக்கி: தன்னம்பிக்கை, அன்பை பகிருங்கள்

நிக்கி: தன்னம்பிக்கை, அன்பை பகிருங்கள்

2 mins read
ad1b3342-bcba-47f8-8c7d-b3d3a2332cf7
மருத்­து­வர்­களும் களப்­ப­ணி­யா­ளர்­களும் ஓய்­வின்றி இரவு பக­லாக உழைக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு அன்­பும் நன்­றிக்­க­ட­னும் செலுத்­தக் கட­மைப்­பட்­டுள்­ளோம். அன்­பு, தன்­னம்­பிக்­கை­யை­ பகிருங்­கள் என்­கி­றார் நிக்கி கல்ராணி. படம்: ஊடகம் -

கொரோனா கிரு­மித்தொற்­றி­ல் இ­ருந்து வெற்­றி­க­ர­மாக மீண்­டுள்­ளார் நிக்கி கல்­ராணி.

சிகிச்­சைக்­கா­கத் தனி­மை­யில் இருந்­த­போது தாம் எதிர்­கொண்ட அனு­ப­வங்­களை அவர் பகிர்ந்துகொண்­டுள்­ளார்.

கிரு­மித்தொற்று ஏற்­ப­டு­ப­வர்­கள் சிறி­தும் பயப்­பட வேண்­டாம் என்­றும் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டால் உட­ன­டி­யா­கப் பரி­சோ­தனை செய்­து­கொள்ள வேண்­டி­யது அவ­சி­யம் என்­றும் அறி­வு­றுத்தி உள்­ளார் நிக்கி.

"அண்­மைய சில மாதங்­கள் உலக மக்­கள் அனை­வ­ருக்­குமே நெருக்­க­டி­யான கால­கட்­ட­மா­கத்­தான் உள்­ளது. எங்கு திரும்­பி­னா­லும் அச்­சம், பதற்­றம்­தான் காணப்­ப­டு­கிறது. "எல்­லா­வற்­றுக்­கும் கொவிட்-19 நோய்­தான் கார­ணம். என­வே­தான் எனது அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்துகொள்­கி­றேன். இதன் மூலம் மக்­க­ளின் அச்­சம் ஓர­ளவு குறை­யும் என நம்­பு­கி­றேன்," என்­கி­றார் நிக்கி.

சில தினங்­க­ளுக்கு முன்பு லேசான காய்ச்­சல், தலை­வலி, தொண்டை வலி போன்ற அறி­கு­றி­கள் நிக்கி­யி­டம் தென்­பட்­ட­ன­வாம். இந்த அறி­கு­றி­கள் ஐந்­தாறு நாட்­கள் நீடித்த நிலை­யில் எந்­த­வித சுவை­யை­யும் உணர முடி­யா­மல் போயி­ருக்­கிறது. நுக­ரும் தன்­மை­யை­யும் இழந்து விட்­டா­ராம்.

சுமார் இரண்டு வார காலம் நீடித்த இந்த அறி­கு­றி­க­ளுக்­குப் பிறகு வழக்கநிலைக்­குத் திரும்பி விட்­டார். எங்கு எப்­படி தனக்கு தொற்று ஏற்­பட்­டது என்­பது தெரி­ய­வில்­லை­யாம்.

மருத்­துவப் பரி­சோ­த­னையை செய்து­கொள்ள சிலர் அஞ்­சு­வது ஏன் என்­பதே தமக்­குப் புரி­ய­வில்லை என்­கி­றார் நிக்கி. பரி­சோ­த­னை­யின் மூலம்­தான் தொற்று இருக்­கி­றதா என்­பது உறுதி செய்­யப்­படும் என்ற நிலை­யில் அதை வேண்­டாம் என்று மறுப்­பது எந்த வகை­யில் புத்­தி­சா­லித்­த­னம் என்­றும் கேள்வி எழுப்­பு­கி­றார்.

"ஒரு­வேளை தொற்று இருக்­கிறது என்று உறு­தி­யா­கி­வி­டுமோ என்று அஞ்­சு­கி­றார்­களா எனத் தெரி­ய­வில்லை. உறுதி செய்­யப்­பட்­டால்­தானே சிகிச்சை அளிக்க முடி­யும்? என்­னைப் பொறுத்­த­வரை தொற்று உறு­தி­யா­ன­துமே என்­னைத் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டேன்.

"14 நாட்­கள் தனி­மை­யில் இருப்­பது அப்­ப­டி­யொன்­றும் சிர­ம­மான விஷ­ய­மல்ல. ஏனெ­னில் இந்த நவீன காலத்­தில் கைபேசி, தொலை­பேசி, கணினி என்று அனைத்து வச­தி­களும் உள்­ளன. நமது நேசத்­துக்கு உரி­ய­வர்­க­ளி­டம் தின­மும் பேச­மு­டி­யும். நேரில் பார்க்க முடி­யாதே தவிர அனை­வ­ரு­ட­னும் தொடர்­பில்­தான் இருக்­கப் போகி­றோம். எனவே பயப்­ப­டா­மல் சிறு அறி­கு­றி­கள் இருந்­தா­லும் உரிய பரி­சோ­த­னை­யைச் செய்­து­கொள்­ளுங்­கள் என்­பதே எனது அறி­வுரை," என்­கி­றார் நிக்கி.

இளம் வய­தி­ன­ரும் உடல்நலனை நன்­றாக வைத்­துக் கொள்­ப­வர்­களும் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை என்று குறிப்­பி­டு­ப­வர், வீட்­டில் உள்ள முதி­யோரை யாரும் மறந்­து­வி­டக்­கூ­டாது என்­கி­றார்.

ஒரு­சி­லர் அசட்­டுத் தைரி­யத்­தில் தங்­க­ளுக்­குத் தொற்று ஏற்­ப­டாது என்ற முடி­வு­டன் ஊர் சுற்­று­வ­தா­க­வும் அப்­ப­டிப்­பட்ட சில­ரைத் தாம் காண நேர்ந்­த­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார் நிக்கி கல்­ராணி.

"அவர்­க­ளுக்கு நிலை­மை­யின் விப­ரீ­தம் புரி­ய­வில்லை. கொரோனா எந்­த­வி­தப் பேத­மும் இன்றி அனை­வ­ரை­யும் ஆட்­டு­விக்­கிறது. எனவே, கவ­ன­மாக இல்லை என்­றால் விளை­வு­ளைச் சந்­திக்க வேண்­டும். அதே­போல் சுய­மாக முடி­வெ­டுத்து மருந்து மாத்­தி­ரை­க­ளைச் சாப்­பி­டு­வ­தும் தவறு.

"கொரோனா கிருமித்தொற்றை குண­மாக்க அல்­லது கட்­டுப்­ப­டுத்த நிறைய மருந்­து­கள் உள்­ளன. ஆனால், யாருக்கு எந்த மருந்து ஒத்­து­வ­ரும் என்­பது மருத்­து­வர்­க­ளுக்­குத்­தான் தெரி­யும். நாமாக முடிவு செய்­யக்­கூ­டாது.

"மருத்­து­வர்­களும் களப்­ப­ணி­யா­ளர்­களும் ஓய்­வின்றி இரவு பக­லாக உழைக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு அன்­பும் நன்­றிக்­க­ட­னும் செலுத்­தக் கட­மைப்­பட்­டுள்­ளோம். அன்­பு, தன்­னம்­பிக்­கை­யை­ பகிருங்­கள்," என்­கி­றார் நிக்கி.