'போராடிப் பழகிவிட்டேன்'

'போராடிப் பழகிவிட்டேன்'

3 mins read
f0d2dca7-257b-4fc4-8898-ae17da8513c2
படம்: ஊடகம் -

சிறு வயது முதலே தனக்கு எது­வும் எளி­தா­கக் கிடைத்­து­வி­டாது, சாத­க­மாக ஏதும் நடந்து­வி­டாது என்­கி­றார் ஐஸ்­வர்யா ராஜேஷ்.

எல்­லா­வற்­றுக்­குமே ஏதே­னும் ஒரு போராட்­டத்தை எதிர்­கொள்­வா­ராம். போரா­டிப் பழ­கி­ய­தால் திரை­யு­ல­கி­லும் இக்­கட்­டான தரு­ணங்­களை தைரி­ய­மாக எதிர்­கொண்­ட­தா­கச் சொல்­கி­றார்.

விக்­ர­மு­டன் 'துருவ நட்­சத்­தி­ரம்', விஜய் சேது­ப­தி­யு­டன் 'க.பெ. ரண­சிங்­கம்', தெலுங்­கில் நானி­யு­டன் 'டக் ஜெக­தீஷ்', அஸ்­வி­னு­டன் 'இது வேதா­ளம் சொல்­லும் கதை' என்று வரி­சை­யா­கப் பல படங்­களில் நடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார் ஐஸ்­வர்யா. மேலும் நாய­கியை மையப்­ப­டுத்தி உரு­வா­கும் 'பிளான் பி', 'திட்­டம் 2' ஆகிய படங்­க­ளை­யும் கைவ­சம் வைத்­துள்­ளார்.

கொரோனா விவ­கா­ரம் கார­ண­மாக எல்லாப் படங்­களும் இவ­ரது வரு­கைக்­காக காத்­துக் கிடக்­கின்­றன.

"நடிக்க வந்த புதி­தில் வாய்ப்­பு­க­ளுக்­காக அல்­லா­டி­யி­ருக்­கி­றேன். ஒரு படத்­தில் ஒப்­பந்­த­மா­வ­தற்­குள் ஏகப்­பட்ட தடை­கள் வந்­து­வி­டும்.

"இப்­போ­தும் சில பிரச்சி­னை­கள் உள்­ளன. ஆனா­லும் அவற்றை மீறி என் திறமை கார­ண­மாக படங்­களில் ஒப்­பந்­த­மா­கி­றேன்," என்று சொல்­லும் ஐஸ்­வர்­யா­வி­டம், தெலுங்­கில் முன்­னணி நாய­க­னான விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் நடித்­தது குறித்­து­தான் தோழி­கள் அதி­கம் விசா­ரிக்­கி­றார்­க­ளாம்.

ஊர­டங்­கின்­போது அவ­ரி­டம் பேசி­னாரா, இல்­லையா? மீண்­டும் அவ­ரு­டன் நடிக்­கும் வாய்ப்பு உண்டா? என்­பன போன்ற கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்து அலுத்­து­விட்­ட­தாம்.

விஜய் தேவ­ர­கொண்­டா­வு­டன் சம்­பந்­தப்­பட்ட ஒரு படத்­தில் நடித்­ததை தம்­மா­லும்­கூட நம்ப முடி­ய­வில்லை என்­கி­றார்.

தொடர்புடைய செய்திகள்

"விஜய் தேவ­ர­கொண்­டா­வுக்கு ரசி­கை­கள் எண்­ணிக்கை அதி­கம். அவர் படத்­தில் நடிக்­கப்­போ­வது தெரிந்­த­தும் எனது தோழி­கள் பல­ரும் படப்­பி­டிப்­புக்கு வரு­வ­தாக நச்­ச­ரித்­த­னர். அவ­ரு­டன் அறி­மு­க­மாகி ஒரே ஒரு செல்ஃபி எடுத்­துக்­கொண்­டால் அதுவே போதும் என்று இடை­வி­டா­மல் கோரிக்கை வைத்­த­வர்­களை பொறு­மை­யாக இருக்­கச் சொல்­லி­விட்டு படப்­பி­டிப்­புக்­குச் சென்­றேன்.

"ஆனால் அங்கு நடந்­த­தைக் கேட்­டால் என்­னைக் கேலி செய்து சிரிப்­பீர்­கள் அல்­லது நான் பொய் சொல்­வ­தாக நினைப்­பீர்­கள். வேறொன்­று­மில்லை, முதல் நாள் அவ­ரைச் சந்­தித்த அடுத்த நிமி­டமே 'என் நண்­பர்­கள் எல்­லோ­ரும் உங்­க­ளு­டன் செல்ஃபி எடுக்க ஆசைப்­ப­டு­கி­றார்­கள். எப்­போது வரச்­சொல்­ல­லாம்?' என்று என்­னி­டம் கேட்டு அதிர்ச்சி அடைய வைத்­தார் விஜய்," என்று சிரிக்­கி­றார் ஐஸ்­வர்யா. எனி­னும் பிறகு ஒரு­நாள் தன் தோழி­க­ளின் ஆசையை நிறை­வேற்றி வைத்­தா­ராம்.

காதல், திரு­ம­ணம் குறித்­தெல்­லாம் கேள்வி எழுப்­பி­னால், இவர் தப்­பித்து ஓடு­வ­தில்லை. மாறாக, நம்­மையே தனது பதில்­க­ளால் 'கலாய்த்து' விடு­கி­றார்.

"சிறு வயது காதல் அனு­ப­வம் உள்­ளதா என்று சில ரசி­கர்­கள் கேட்­ப­துண்டு. பள்­ளி­யில் படிக்­கும்­போதே காத­லில் விழுந்து விட்­டேன். ஐந்­தாம் வகுப்­பில் இருந்தே இரு­வ­ரும் நல்ல நண்பர்கள். 8ஆம் வகுப்­பில் காத­லித்­தோம். ஆனா­லும் 12ஆம் வகுப்­பில் படிக்­கும்­போது ஒரு­வரை ஒரு­வர் நன்கு புரிந்­து­கொண்டு சுமூக­மா­கப் பிரிந்­து­விட்­டோம். அவ்­வ­ள­வு­தான் என் காதல்," என்று சொல்­லும் ஐஸ்­வர்யா, அடுத்த பிறவி என்று ஒன்று இருக்­கு­மா­னால் ஆணா­கப் பிறக்­கத்­தான் விரும்­பு­கி­றா­ராம்.

அதற்­காக அவர் பெண்­களை மட்­டம் தட்­டி­விட்­ட­தாக அர்த்­தம் அல்ல. பெண்­ணாக இருப்­பது பெருமை என்­றா­லும், ஓர் ஆணின் அனு­ப­வங்­க­ளை­யும் வாழ்ந்து பார்த்து தெரிந்து­கொள்ள விரும்­பு­வ­தா­கச் சொல்­கி­றார். கிசு­கி­சுக்­க­ளைப் படித்து இவர் கோபப்­ப­டு­வதே இல்லை. ரசிப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

"ஒரு­முறை பத்­தி­ரி­கை­யில் வெளி­யான கிசு­கி­சு­வைப் படித்­த­தும் 'அடடா அப்­படி நடந்­தி­ருக்­க­லாமே?' என்று தோன்­றி­யது. கார­ணம், அதை அவ்­வ­ளவு சுவா­ர­சி­ய­மாக எழுதி இருந்­த­னர். 'ஐஸ் நடிகை அது­வேண்­டும், இது வேண்­டும் என்று கேட்­கி­றா­ராம். அவ­ருக்கு ஒரு கோடி ரூபாய் சம்­ப­ள­மாம்' என்று அந்த கிசு­கி­சு­வில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அதைப் படித்ததும் சிரித்துவிட்­டேன். அப்­படி நடந்­தால் நன்­றாக இருக்­கும்.

"பள்ளியில் படிக்­கும்­போதே வேலை செய்­தேன். தெரு­வில் அலைந்து திரிந்து துண்­டுப் பிர­சு­ரங்­கள் விநி­யோ­கிக்­கும் வேலையை செய்த அனு­ப­வம் கூட உண்டு. இப்போது ஓரளவு சாதித்துவிட்டதாகத் தோன்றும் அதேவேளையில் தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் ஐஸ்வர்யா.

குறிப்புச் சொற்கள்