'27 மில்லியன் பேர் பார்த்த என் குறும்படம்'

'27 மில்லியன் பேர் பார்த்த என் குறும்படம்'

3 mins read
45bd5def-f832-4591-b11d-6323dc8c788a
பாண்டியராஜனின் மூன்று மகன்­களில் மூத்த மகன் பல்­ல­வ­ரா­ஜன், கணினி தொழில்­நுட்­பத் துறை­யி­லும் இரண்­டா­வது மகன் பிருத்வி, திரைப்­பட நடி­க­ரா­க­வும் மூன்­றா­வது மகன் பிரே­ம­ரா­ஜன், திரைத்­து­றை­யில் ஆளில்லா விமானத்தை இயக்குபவ ரா­க­வும் பணி­யாற்றி வரு­கின்­ற­னர். படம்: ஊடகம் -
multi-img1 of 2

கொரோனா ஊர­டங்­கின் இறு­திக்­கட்­டம் (கிளை­மாக்ஸ்) என்­ன­வென்று தெரி­யா­ம­லேயே உலக மக்­கள் வாழ்ந்து கொண்­டி­ருப்­ப­தாக சொல்­கி­றார் நடி­க­ரும் இயக்­கு­ந­ரு­மான பாண்­டி­ய­ரா­ஜன்.

நடக்­கப் போவதை மாற்ற முடி­யாது என்­றா­லும் கொரோனா விவ­கா­ரத்­தால் இனி எதை­யும் தைரி­ய­மாக எதிர்­கொள்ள வேண்­டும் எனும் மனப்­பக்­கு­வம் வந்­தி­ருப்­ப­தா­கச் சொல்­கி­றார்.

சிறு­வ­ய­தில் படிப்­பின்­மீது இவ­ருக்கு மிகுந்த ஆர்­வ­மாம். ஆனால், குடும்­பச் சூழ்­நிலை கார­ண­மாக பத்­தாம் வகுப்­புக்­குப் பிறகு படிப்­பைத் தொடர முடி­ய­வில்லை.

நடி­க­ராக வேண்­டும் எனும் ஆசை­யு­டன் திரைத்­து­றைக்கு வர­வில்லை என்­றும் இயக்­கு­ந­ரா­வது மட்­டுமே தனது கன­வாக இருந்­தது என்­றும் சொல்­கி­றார்.

"பத்­தாம் வகுப்பு முடிந்­த­தும் ஏதே­னும் வேலை­யில் சேரும்­படி அப்பா கூறி­னார். நான் படிக்க விரும்­பு­வ­தாக சொன்­னேன். அதற்கு, 'படித்­து­விட்டு என்ன செய்­யப் போகி­றாய்?' என்று சொல்­லி­விட்­டார். சந்­தர்ப்ப சூழ்­நி­லை­யால் நடி­க­ராகி விட்­டேன். பிறகு இயக்­கு­ந­ரா­னேன். இதெல்­லாம் ஒரு கொடுப்­பி­னை­தான். ஆனா­லும் படிப்பை விட்­டு­வி­ட­வில்லை," என்று சொல்­லும் பாண்­டி­ய­ரா­ஜன், கடந்த 2004ஆம் ஆண்டு அஞ்­சல் வழி 'எம்ஏ' பட்ட மேற்­ப­டிப்பை முடித்­துள்­ளார். பின்­னர் 2007ஆம் ஆண்­டில் 'எம்.ஃபில்', அதை­ய­டுத்து 'பிஎச்டி' (முனை­வர்) பட்­ட­மும் பெற்­றுள்­ளார்.

முனை­வர் படிப்­புக்­கான ஆய்­வுக்கு இவர் எடுத்­துக்­கொண்ட தலைப்பு 'தமிழ்த் திரைப்­ப­டக் கலை­ஞர்­க­ளின் சமு­தாய பங்­க­ளிப்பு'. விரை­வில் ஆய்­வுக்­காக திரட்­டிய தக­வல்­க­ளைப் புத்­தகமாக வெளி­யி­டத் திட்­ட­மிட்­டுள்­ளார். ஏற்­கெ­னவே 'தேடல்', தூக்­கம் வரா­த­போது சிந்­தித்­த கருத்துகளை 'கற்­றது விசில் அளவு' உள்­ளிட்ட புத்­த­கங்­களாக இவர் வெளி­யிட்­டுள்­ளார். மேலும் குறும்­ப­டங்­க­ளி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றா­ராம்.

ஊர­டங்கு வேளை­யில் சும்மா இருக்­கா­மல் இணை­யம் வழி பல­ருக்கு திரைப்­பட இயக்­கம் தொடர்­பாக வகுப்­பு­கள் நடத்தி வரு­கி­றார் பாண்­டி­ய­ரா­ஜன். இவர் அண்­மை­யில் இயக்கி வெளி­யிட்ட 'ஹெல்ப்' என்ற குறும்­ப­டத்தை 27 மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் இணை­யத்­தில் பார்த்து ரசித்­துள்­ள­னர்.

"இது என்­னு­டைய இரண்­டா­வது குறும்­ப­டம். ஏழெட்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு 35 ஆயி­ரம் ரூபாய் செல­வ­ழித்து 'மகன்' என்­றொரு குறும்­ப­டத்தை இயக்­கி­னேன். விருது ஏதும் கிடைக்­க­வில்ல என்­றா­லும் தமிழ்­நாடு திரைப்­ப­டக் கழ­கம் அதை 1.85 லட்­சம் ரூபாய் கொடுத்து வாங்­கி­யது. இப்­போது எடுத்த குறும்­ப­டம் யுடி­யூப் மூல­மாக 5 லட்ச ரூபாயை வரு­மா­ன­மா­கத் தந்­துள்­ளது. இதைப் பெரு­மைக்­காக சொல்­ல­வில்லை. குறும்­ப­டங்­க­ளுக்கு நல்ல எதிர்­கா­லம் உள்­ளது," என்­கி­றார் பாண்­டி­ய­ரா­ஜன்.

குறும்­ப­டம் இயக்­கு­ப­வர்­கள் ஏனோ­தானோ என்று செயல்­ப­டா­மல் உண்­மை­யான அர்ப்­ப­ணிப்­பு­டன் செயல்­பட்­டால் நிச்­ச­யம் வெற்றி பெற­லாம் என்று குறிப்­பி­டு­ப­வர் முன்பு போல் நமது படைப்­பு­களை வெளி­யிட பிற­ரது உதவி இனி தேவை­யில்லை என்­கி­றார்.

யுடி­யூப் போன்ற தளங்­களில் வெளி­யி­டும் படைப்­பு­கள் தர­மாக இருக்­கும் பட்­சத்­தில் உல­கம் முழு­வ­தும் அவை சென்று சேரும் என்­கி­றார்.

"திரைப்­பட இயக்­கம் தொடர்­பான அடிப்­படை விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும். ஒரு படைப்பை இயக்­கு­வ­தற்­கான முக்­கி­ய­மான அடிப்­படை சூட்­சு­மங்­களை மட்­டுமே கற்­றுத்­த­ரு­கி­றேன்.

"ஒரு படைப்­பைத் திரை­யில் பார்க்­கும்­போது அந்­தக் கதை புரிய வேண்­டும். மன­தில் உரு­வா­கும் புதிய கதைக்­க­ருவை விரி­வு­ப­டுத்த முடி­யுமா என்று நன்கு யோசி­யுங்­கள். நாலு பேரு­டன் அமர்ந்து பேசும்­போ­து­தான் கதை நக­ரும், வள­ரும். இணை­யம் வழி வகுப்­பு­கள் எடுக்­கும்­போது எது குறித்­தும் முத­லில் குறை­வா­கத்­தான் கற்­றுக் கொடுப்­பேன். பிறகு மாண­வர்­கள் அது தொடர்­பாக கேள்­வி­கள் கேட்க கேட்க அனைத்­தும் விரி­வ­டைந்­து­கொண்டே செல்­லும்.

"மொத்­தத்­தில் நான் சொல்ல வரும் விஷ­யம் இது­தான். இயக்­கம் தொடர்­பான அடிப்­படை விஷ­யங்­க­ளைக் கற்­றுக்­கொண்­டால் போதும். குறும்­ப­டங்­கள் எளி­தில் கைவ­ச­மா­கும். எதிர்­கா­லம் நன்­றாக இருக்­கும்," என்று புன்­ன­கைக்­கிறார் பாண்­டி­ய­ரா­ஜன்.

இவ­ரது மூன்று மகன்­களில் மூத்த மகன் பல்­ல­வ­ரா­ஜன், கணினி தொழில்­நுட்­பத் துறை­யி­லும் இரண்­டா­வது மகன் பிருத்வி, திரைப்­பட நடி­க­ரா­க­வும் மூன்­றா­வது மகன் பிரே­ம­ரா­ஜன், திரைத்­து­றை­யில் ஆளில்லா விமானத்தை இயக்குபவ ரா­க­வும் பணி­யாற்றி வரு­கின்­ற­னர்.