எஸ்.பி சரண்: ‘வரும் திங்கட்கிழமையன்று நல்ல செய்தி வரும்’

கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாக அவரது மகன் எஸ்.பி சரண் தெரிவித்திருக்கிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருக்கும் திரு பாலசுப்ரமணியத்திற்கு முழுமையாக நினைவு திரும்பியிருப்பதாகவும் பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிப்பதாகவும் அவர் தங்கியிருக்கு மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

“எஸ்.பி.பி.யின் உடல்நிலை நான்காவது நாளாக சீராக இருப்பதாக அறிகிறோம். அவரது உடல்நிலை குறித்து வரும் திங்கட்கிழமை நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம்" என்று திரு சரண், தமது சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட காணொளி ஒன்றின் வழியாகத் தெரிவித்தார்.

மருத்துவமனையில் கடந்த மாதம் 5ஆம் தேதியன்று சேர்க்கப்பட்ட திரு பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் அவர் இந்நோய்க்குப் பலியானதாக இந்திய ஊடகங்கள் சில தவறுதலாக செய்தி வெளியிட்டன.

Hashtags: #SPBalasubrahmanyam #coronavirus

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!