முற்பிறவி பந்தம்: ஜேசுதாஸ் உருக்கம்

முற்பிறவி பந்தம்: ஜேசுதாஸ் உருக்கம்

1 mins read
f0f95673-6739-4dff-aeea-d8c5f811602a
-

அமெ­ரிக்­கா­வில் இருப்­ப­தால் தம்­மால் எஸ்பி. பாலா­வின் இறு­திச்­ச­டங்­கில் பங்­கேற்க முடி­ய­வில்லை என பாட­கர் ஜேசு­தாஸ் கூறி­யுள்­ளார்.

எஸ்­பிபி தம்மை அண்ணா என்று பாசத்­து­டன் அழைக்­கும்­போ­தெல்­லாம் ஏதோ ஒரு பிற­வி­யில் இரு­வ­ரும் சகோ­த­ரர்­க­ளாக பிறந்­தி­ருப்­போம் என்று எண்­ணத்­தோன்­றும் என அவர் தெரி­வித்­துள்­ளார்.

எஸ்பிபியின் மர­ணம் விவ­ரிக்க முடி­யாத துயரத்­தைத் தந்­தி­ருப்­ப­தாக அவ­ரு­டன் நூற்­றுக்­க­ணக்­கான பாடல்­களை இணைந்து பாடி­யுள்ள பின்­ன­ணிப் பாடகி எஸ். ஜானகி தெரி­வித்­துள்­ளார்.

எஸ்.பிபி.யின் மர­ணம் குறித்து அறிந்த அந்தத் தரு­ணம் முதல் என் மன­நிலை இயல்­பாக இல்லை என்­றும் சிறு வய­தி­லேயே இவர் பாடி­ய­தைக் கேட்டு தான் பாராட்டி வாழ்த்­தி­ய­தா­க­வும் ஜானகி தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய அதி­பர் ராம்­நாத் கோவிந்த், மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, ஆளு­நர் பன்­வா­ரி­லால் புரோ­ஹித், முதல்­வர் பழ­னி­சாமி, திமுக தலை­வர் மு.க.ஸ்டா­லின், தேமு­திக தலை­வர் விஜ­ய­காந்த், மதி­முக பொதுச்­செ­ய­லர் வைகோ, பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் உள்­ளிட்ட பல முக்­கிய தலை­வர்­களும் பிர­மு­கர்­களும் எஸ்­பிபி மறை­வுக்கு இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர். மேலும், ஆந்­திர அர­சின் சார்­பில் அம்­மா­நில அமைச்­சர் இறு­திச்­ச­டங்­கில் பங்­கேற்­றார்.

ஒட்­டு­மொத்த இந்­திய திரை­யு­ல­கக் கலை­ஞர்­களும் எஸ்­பிபி மறை­வுக்கு இரங்­கல் தெரி­வித்­துள்­ள­னர்.