இன்று நண்பகல் நிலவரப்படி சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து சிங்கப்பூரில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57,715. இவர்களில் இதுவரை 57,352 பேர் குணமடைந்துள்ளனர்.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் அறுவர் சிங்கப்பூருக்கு வெளியே கிருமியைத் தொற்றியவர்கள். சமூக அளவில் இருவர் பாதிக்கப்பட்டனர். அந்த இருவருமே எஸ்-பாஸ் அட்டைதாரர்கள்.
வெளிநாட்டில் புதிதாக ஐவர் கிருமித்தொற்றுக்கு உள்ளாகி சிங்கப்பூர் வந்திருப்பதாக நேற்று அறிவிக்கப்ப்டடது. அவர்களில் மூவர் நிரந்தரவாசிகள். இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்.
செப்டம்பர் 15ஆம் தேதியன்றும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் இந்த நிரந்தரவாசிகள் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பினர்.