சமூக புரட்சி குறித்துப் பேசும் 'அருவா சண்ட'

1 mins read
a37fa5cc-cccc-4b50-ae10-c31fa733b31f
'அருவா சண்ட' படத்தில் வி.ராஜா, மாளவிகா மேனன். -

ஆதி­ரா­ஜன் இயக்­கத்­தில் வி.ராஜா, மாள­விகா மேனன் நடிப்­பில் உரு­வாகி இருக்­கும் படம் 'அருவா சண்ட'.

இது சமூக புரட்­சியை கரு­வாக கொண்ட கதை­யம்­சம் உள்ள பட­மாம். இதில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் சரண்யா பொன்­வண்­ணன் நடித்­துள்­ளார்.

தன்­னைப் போன்ற குணச்­சித்­திர நடி­கை­க­ளுக்கு இது­போன்ற படங்­கள் அமை­வது மிக­வும் அரிது என்று சரண்யா கூறி­ய­தைப் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன்," என்­கி­றார் இயக்­கு­நர் ஆதி­ரா­ஜன்.

படத்­தின் கதை­யைக் கேட்டு முடித்த அடுத்த நிமி­டமே நடிக்க ஒப்­புக்­கொண்­டா­ராம் சரண்யா. அது­மட்­டு­மல்ல, விஜய்­சே­து­ப­தி­யுடன், 'தென்­மேற்கு பரு­வக்­காற்று' படத்­தில் நடிக்­கும்­போது ஏற்­பட்ட அனு­ப­வத்தை இந்த படத்­தில் உணர்ந்­த­தா­கச் சொன்­னா­ராம்.

"பின்­ன­ணிக் குரல் பதி­வின்­போது அவர் தன்­னை­யும் அறி­யா­மல் கண்­க­லங்­கி­விட்­டார். படத்­தின் இறு­திக்­காட்சி அவரை கலங்க வைத்­தது.

"படத்­துக்கு மேலும் வலுசேர்க்­கும் வகை­யில், கவி­ஞர் வைர­முத்து பாடல்­ வரிகளை எழு­தி­யி­ருக்­கி­றார். இது அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற படைப்பாக உருவாகி உள்ளது," என்கிறார் ஆதிராஜன்.

"இந்தப் படத்தை தைரியமாக தயாரித்து, எனக்கு மகனாக, கநாநாயகனாக நடித்துள்ள வி.ராஜா, மேலும் பல சமூக சிந்தனைகளை கொண்ட படங்களை தயாரித்து நடிக்க வேண்டும்," என்று வாழ்த்தி உள்ளார் சரண்யா பொன்வண்ணன்.

படம் விரைவில் வெளியாகிறது.