ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கொரோனா நேரத்தில் எந்த நிகழ்ச்சியும் நடக்காததால் வரி விலக்கு கேட்டு நீதிமன்றத்தை அணுகியபோது, ‘நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காதீர்கள்,’ என்று நீதிபதி கண்டனக் குரல் எழுப்பி இருந்தார். அதைத் தொடர்ந்து ரஜினி ரூ. 6.5 லட்ச ரூபாயை வரியாகக் கட்டினார்.
அதனைத்தொடர்ந்து பாடகி சுசித்ரா, “வரி கட்டுவதற்கு ரஜினி இவ்வளவு போராடனுமா? மின்சாரம் பயன்படுத்தாமலேயே கூடுதல் மின் கட்டணம் வந்தபோது நடிகர் பிரசன்னா கட்டவில்லையா? மக்கள் பிரச்சினையை விட உங்கள் பிரச்சினை பெரிதாகத் தெரிந்தால் வித்தியாசத்தை சொல்ல முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் அரசியல்வாதி ஆகக் கூடாது என்றார்.
“அரசியல் என்பது புனிதமானது. மக்களுக்காக நீங்கள் ஏதாவது செய்ய முடியும் என்று கடவுள் நிர்ணயித்த ஒரே இடம். தயவு செய்து அதை உங்களின் தனிப்பட்ட இடமாக மாற்ற வேண்டாம் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாஸன்,” என்று தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த டுவிட்டைப் பார்த்து கமல், ரஜினி ரசிகர்கள் பொங்கினாலும் பல இணையவாசிகள் அவரின் தைரியத்தைப் பாராட்டி வருகிறார்கள்.