சூர்யா நடித்து இம்மாத இறுதியில் வெளிவர இருக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ளார் சூர்யா.
வி.கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கும் ‘வாடிவாசல்’ என்ற படம் ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாக வைத்து தயாராகிறது. மெரினா போராட்டம் மூலம் உலக அளவில் பிரபலமான ஜல்லிக்கட்டு படத்தில் சூர்யா நடிப்பதால் படத்திற்குப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு, ஜி.வி.
பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்திற்காக சூர்யா தாடியுடன் காணப்படுகிறார். அந்தப் படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகுதியாக பகிரப்பட்டு வருகின்றன. இந்த படத்தில் சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.