பதிலடி தரும் 'வெரலு'

பதிலடி தரும் 'வெரலு'

3 mins read
c65272c2-41f4-4281-a267-b4974486317b
கௌதம் கார்த்திக் -

பத்ரி வெங்­க­டேஷ் இயக்­கும் 'வெரலு' படத்­தில் நாய­க­னாக ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளார் கௌதம் கார்த்­திக். இது முழு­நீள அடி­த­டி ­ப­ட­மாக உரு­வாக உள்­ள­தாம்.

கௌதம் கார்த்­திக்­கைத் தமக்கு ரொம்­பப் பிடிக்­கும் என்­றும் அவரை வைத்து ஒரு படம் இயக்­க­வேண்­டும் என்­பது தமது நீண்­ட­நாள் விருப்­ப­மாக இருந்­தது என்­றும் சொல்­கி­றார் பத்ரி.

இவர் இதற்கு முன்பு 'பாணா காத்­தாடி', 'செம போத ஆகாத' ஆகிய படங்­களை இயக்­கி­ய­வர். அடுத்து ரியோ, ரம்யா நம்­பீ­சன் வைத்து 'பிளான் பண்ணி பண்­ண­னும்' படத்தை இயக்கி முடித்­துள்­ளார்.

"இந்­தாண்டு துவக்­கத்­தில் அந்­தப் படம் வெளி­யாகி இருக்­க­வேண்­டும். ஆனால், கொரோனா ஊர­டங்கு கார­ண­மாக வெளி­யீடு தள்­ளிப்­போய் விட்­டது. இடைப்­பட்ட நேரத்­தில் சும்மா இருக்­கா­மல் புதுக்­க­தை­யைத் தயார் செய்­தேன். அதில் நடிக்க கௌதம்­தான் பொருத்­த­மான நாய­கன் என்று தோன்­றி­யது. அத­னால் அவரை ஒப்­பந்­தம் செய்­துள்­ளோம்," என்­கி­றார் பத்ரி.

'பிளான் பண்­ணிப் பண்­ண­னும்' படத்­தின் தயா­ரிப்பு நிறு­வ­னமே 'வெரலு' படத்­தை­யும் தயா­ரிக்க உள்­ளது. கதை­யைக் கேட்­ட­தும் எந்­த­வி­தத் தயக்­க­மு­மின்றி நடிக்க ஒப்­புக்­கொண்­டா­ராம் கௌதம். சென்­னை­தான் கதைக்­க­ள­மாம்.

முழுக் கதை­யும் சென்னை திரு­வல்­லிக்­கேணி பகு­தி­யில் நடை­பெ­று­கிறது. சண்­டைக்­காட்­சி­களை ஹாலி­வுட் தரத்­துக்­குப் பட­மாக்க உள்­ள­ன­ராம்.

"கௌதம் கார்த்­திக்கை எனக்கு ரொம்­பப் பிடிக்­கும். இயக்­கு­ந­ரின் எண்­ணத்­துக்கு ஏற்ப, நடிக்­கக்­கூ­டிய ஒரு­சில நடி­கர்­களில் இவ­ரும் ஒரு­வர். எனது முதல் படம் முழு­நீள காதல் கதை. இரண்­டா­வது படம் திகில் வகை­யைச் சார்ந்­தது. அடுத்து நகைச்­சு­வை­யில் கவ­னம் செலுத்­தி­னேன்.

"இப்­போது ஆக்­‌ஷன் படத்தை உரு­வாக்க உள்­ளேன். இது எனக்கு முற்­றி­லும் புதிய, மாறு­பட்ட களம். எனவே நிச்­ச­யம் சவா­லாக இருக்­கும். எனி­னும் கௌதம் போன்ற இள­மை­யான, திற­மை­யுள்ள கதா­நா­ய­கர்­களை நம்பி தைரி­ய­மா­கக் கள­மி­றங்­க­லாம். அந்த நம்­பிக்­கை­யில்­தான் பட வேலை­க­ளைத் துவங்கி உள்­ளேன்," என்­கி­றார் பத்ரி வெங்­க­டேஷ்.

படத்­தின் நாய­கன் கௌதம் கார்த்­திக்­கி­ட­மும் உற்­சா­கம் கரை­பு­ரண்டு ஓடு­கிறது. மிக விரை­வில் படப்­பி­டிப்­பைத் துவங்க உள்­ள­னர் என்­பதே இதற்­குக் கார­ணம்.

"டிசம்­பர் முதல் வாரத்­தில் எனக்­கான காட்­சி­கள் பட­மாக்­கப்­படும் என நினைக்­கி­றேன். மீண்­டும் படப்­பி­டிப்­பில் பங்­கேற்­பது நிச்­ச­யம் மகிழ்ச்சி தரும் விஷ­யம்­தான். ஆறு மாதங்­க­ளாக கேமரா முன்­னால் நிற்­கா­தது எதையோ இழந்­து­விட்ட உணர்வை ஏற்­ப­டுத்தி உள்­ளது," என்­கி­றார் கௌதம்.

'வெரலு' என்­பது இவ­ரது கதா­பாத்­தி­ரத்­தின் பெய­ராம். அதா­வது எல்­லோ­ரு­டைய கண்­க­ளி­லும் விரலை விட்டு ஆட்­டு­ப­வன் என விளக்­கம் தரு­கி­றார்.

"என்னை நம்பி மிகப்­பெ­ரிய பட்­ஜெட்­டு­டன் கற­மி­றங்­கு­கி­றார் இயக்­கு­நர் பத்ரி. அத­னால் எனக்­கான பொறுப்பு மேலும் அதி­க­ரித்­துள்­ளது. எல்­லோர் கண்­க­ளி­லும் விரலை விட்டு ஆட்­டும் நாய­க­னைச் சிலர் குறி­வைத்­துத் துரத்­து­கி­றார்­கள். நாய­கன் கண்­ணி­லேயே விரலை விட்டு ஆட்­டு­கி­றார்­கள். அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளுக்கு நாயகன் எவ்­வாறு பதி­லடி கொடுக்­கி­றான் என்பது­தான் கதை. இதை மிகுந்த விறு­வி­றுப்­பு­டன் காட்­சிப்­ப­டுத்த உள்­ளனர்.

"நான் ஏற்­கெ­னவே அடி­த­டிப் படங்­களில் நடித்­தி­ருக்­கி­றேன். அவற்­றை­விட இதில் எனது கோப­மும் அதி­ர­டி­யும் கூடு­த­லா­கவே இருக்­கும்.

"அதற்­காக பஞ்ச் (அதி­ரடி) வச­னங்­கள் அதி­க­மாக இருக்­கும் என யூகிக்க வேண்­டாம். குறை­வா­கத்­தான் பேசு­வேன். சண்­டைக் காட்­சி­களும் யதார்த்­தத்தை மீறாத அள­வில்­தான் இருக்­கும். மொத்­தத்­தில் இந்­தப் புதிய குழு­வி­டம் இருந்து பொழு­து­போக்கு அம்­சங்­கள் நிறைந்த ஒரு நல்ல படத்தை எதிர்­பார்க்­க­லாம்," என்­கி­றார் கௌதம் கார்த்­திக்.

இப்படத்தின் நாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. சில முன்னணி நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மிக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகுமாம்.

சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக கௌதம் சிறப்புப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.