இத்தாலியில் உருவாகும் பிரபாஸ் படம்

இத்தாலியில் உருவாகும் பிரபாஸ் படம்

1 mins read
a0c00adc-3b4a-4076-ade9-18bddd8f71b7
படம்: ஊடகம் -

'பாகு­பலி'க்குப் பிறகு பிர­பாஸ் நடிக்­கும் படங்­க­ளுக்கு கோடிக்­கணக்­கில் செல­வி­டப்­ப­டு­கிறது. அந்த வகை­யில் பெரும் பொருட்­செ­ல­வில் உரு­வாகி வரு­கிறது 'ராதே ஷ்யாம்'.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி­களில் உரு­வா­கும் இப்­படத்­தில் பிர­பாஸ் ஜோடி­யாக பூஜா ஹெக்டே நடிக்­கி­றார். இத்­தா­லி­யில் படப்­பி­டிப்பு நடந்து வரு­கிறது.

"ஐரோப்­பா­வில் நடக்­கும் காவி­யக் காதல்­தான் இப்­ப­டத்­தின் கதை. கொரோனா கிரு­மித்­தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் இத்­தா­லி­யும் ஒன்று. எனவே தகுந்த முன்­னெச்­ச­ரிக்கை மற்­றும் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட பிறகே படப்­பி­டிப்பை துவங்­கி­யுள்­ளோம்.

"படத்­தின் முதல் தோற்­றச் சுவ­ரொட்­டி­க­ளுக்கு ரசி­கர்­கள் மத்­தி­யில் பலத்த வர­வேற்பு கிடைத்­துள்­ளது. இந்­தப் படம் பிர­பாஸ் ரசி­கர்­க­ளுக்­குக் கொண்­டாட்­ட­மாக அமை­யும்," என்­கி­றார் படத்­தின் தயா­ரிப்­பா­ளர்­களில் ஒரு­வ­ரான வம்சி.

பூஜா ஹெக்­டே­வுக்கு இது­வரை இல்­லாத அள­விற்கு பெரும்­தொகை சம்­ப­ள­மா­கப் பேசப்­பட்­டுள்­ள­தாம். அவ­ரும் இந்­தப் படம் தமக்­குப் பெரும் திருப்­பு­மு­னை­யாக அமை­யும் என்று கூறி­யுள்­ளார்.