லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’.
இந்தப் படம் வெளியாகும் நாளுக்காக இந்த இரண்டு உச்ச நடிகர்களின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் திரையரங்குகள் திறந்தாலும் 50 விழுக்காட்டு இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது தமிழக அரசு. அதனால் பெரிய படங்கள் ஏதும் தீபாவளிக்கு திரையரங்கில் திரையிடப்படவில்லை.
பொங்கலுக்குள் கொரோனா பாதிப்பு குறைந்து திரையரங்குகளில் 100 விழுக்காட்டு ரசிகர்களுடன் படத்தை வெளியிடலாம் என்று காத்திருந்தனர் படக்குழுவினர்.
ஆனால், கொரோனா நாளுக்கு நாள் அதிகரிப்பதால் திரையரங்கில் வெளியிடும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி ‘நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி’ பெரும் தொகை கொடுத்து ‘மாஸ்டர்’ படத்தை வாங்கியுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், மாஸ்டர் படக்குழு, அவ்வாறு எந்த நிறுவனத்துடனம் ஒப்பந்தம் போடப்படவில்லை என்றும் திரையரங்குகளில்தான் படம் திரையிடப்படும் என்றும் டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
எனவே, ரசிகர்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியதுதான்!