குத்துச்சண்டையிடும் ஆர்யா

3 mins read
30d0dc67-3c3a-497b-a00d-b9f87eec78f7
ஆர்யா -

திரு­ம­ணத்­துக்­குப் பிறகு ஆர்யா தரப்­பில் இ­ருந்து அதிக தக­வல்­கள் ஏதும் வெளி­யா­க­வில்லை. எனி­னும் சத்­த­மின்றி சில படங்­களில் நடித்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் பா.ரஞ்­சித் இயக்­கத்­தில் உரு­வா­கும் 'சார்­பட்டா' படத்­தில் நாய­க­னாக நடித்து வரு­கி­றார் ஆர்யா. இது குத்­துச்­சண்­டையை மைய­மாக வைத்து உரு­வா­கிறது. இதற்­காக கடந்த சில மாதங்­க­ளாக தீவிர குத்­துச்­சண்­டைப் பயிற்சி மேற்­கொண்­டுள்­ளார் ஆர்யா.

முன்பு சென்­னை­யில் ஆங்­கி­லக் குத்­துச்­சண்டை என்­பது பிர­ப­ல­மாக இருந்­தது. அதை மைய­மாக வைத்து இரண்டு பரம்பரைக்­குள் நடக்­கும் சண்­டை­யில் யார் சாதித்­துக் காட்­டு­கி­றார்­கள் என்­பதை விவ­ரிக்­கிறது 'சார்­பட்டா'.

சென்னை சென்ட்­ரல் ரயில் நிலை­யத்­துக்­குப் பின்­ப­கு­தி­யில் இருக்­கும் குடி­யி­ருப்­பு­தான் கதைக்­க­ளம்.

'சார்­பட்டா' என்­றால் நான்கு கத்­தி­க­ளைக் கொண்டு போடும் சண்­டை­யைக் குறிக்­கு­மாம். இது உருது வார்த்தை என்­றும் 'சர்' பட்­டம் பெற்ற ஒரு­வர் முதன்­மு­த­லாக இவ்­வாறு சண்­டை­யிட்­டார் என்­றும் அத­னால் வழக்கு மொழி­யில் 'சார்­பட்டா' என்று மாறி­ய­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

"இப்­படி நிறைய தக­வல்­க­ளைக் கேள்­விப்­பட்­டோம். எனி­னும் இந்த வார்த்­தைக்­கான சரி­யான அர்த்­தம் என்­ன­வென்று தெரி­ய­வில்லை. ஆங்­கி­லே­யர்­கள் வரு­வ­தற்கு முன்பே இங்கு தமி­ழர் குத்­துச்­சண்டை வழக்­கத்­தில் இருந்­தி­ருக்­கிறது. அதில் முகத்­தில் மட்­டுமே குத்­து­வார்­கள். பிற­கு­தான் அது ஆங்­கி­லக் குத்­துச்­சண்­டை­யாக மாறி­விட்­டது," என்­கி­றார் பா.ரஞ்­சித்.

1995 வரை வட­சென்­னை­யில் இந்த விளை­யாட்டு மிகத்­தீ­வி­ர­மாக விளை­யா­டப்­பட்டு வந்­த­தாக குறிப்­பி­டு­ப­வர், இந்த விளை­யாட்டு ஒரு பெரிய கலா­சா­ரம் என்­கி­றார்.

"அதை முழு­மை­யாக இந்­தப்­ப­டத்­தில் சொல்­லி­வி­ட­மு­டி­யாது. இரண்­டரை மணி நேரத்­துக்­குள், என்­னால் சொல்ல முடிந்த அள­வுக்­குச் சொல்ல முயற்சி செய்­தி­ருக்­கி­றேன்.

"இதன் அடுத்­த­டுத்த பாகங்­களை இயக்­க­வேண்­டும் என்­கிற ஆர்­வ­மும் இருக்­கிறது. ஏனென்­றால், இதில் சொல்­லப்­பட வேண்­டிய கதை­கள் இன்­னும் நிறைய இருக்­கின்­றன," என்று சொல்­லும் ரஞ்­சித், இந்த கதைக்கு ஆர்யா தான் பொருத்­த­மான நாய­கன் என்­கி­றார்.

'மெட்­ராஸ்' படம் வந்­த­போதே இரு­வ­ரும் இணைந்து ஒரு படத்­தில் பணி­யாற்­ற­லாம் என்று ஆர்யா கூறி­யி­ருந்­தா­ராம். அதற்­கான நேரம் இப்­போ­து­தான் அமைந்­தி­ருப்­ப­தாக இரு­வ­ருமே ஒரு­சேர சொல்­கி­றார்­கள்.

"தனது புதுப்­ப­டத்­துக்கு குத்­துச்­சண்டை வீர­ருக்­கு­ரிய உடல்­வாகு கொண்ட நடி­கர் ரஞ்­சித்­துக்குத் தேவைப்­பட்­டார். அப்­போது அவ­ருக்கு என் நினைவு வந்­தி­ருக்­கிறது. நான் பொருத்­த­மாக இருப்­பேன் எனக் கருதி ஒப்­பந்­தம் செய்­தார்.

"அந்­தப் படத்­தில் நாய­க­னின் பெயர் கபி­லன். என்­னால் முடிந்­த­வரை கடு­மை­யாக உழைத்­தி­ருக்­கி­றேன்," என்­கி­றார் ஆர்யா.

படத்­துக்­காக ரஞ்­சித் கூறி­யது போல் தன் உடல்­வாகை கட்­டுக்­கோப்­பாக வடிவமைத்­துக்கொண்­டா­ராம். மேலும், குத்­துச்­சண்டை கற்­றுக்­கொண்­ட­து­டன் தனது கதா­பாத்­தி­ரத்­துக்கு ஏற்ற உடல்­மொ­ழி­யை­யும் கச்­சி­த­மாக வெளிப்­ப­டுத்தி உள்­ள­தாக ஆர்­யாவை பாராட்­டு­கி­றார் ரஞ்­சித்.

'சார்­பட்டா'வில் நாய­கி­யாக நடிப்­ப­வர் துஷாரா. கதைப்­படி அவ­ரது பெயர் மாரி­யம்மா.

தமி­ழக கிரா­மங்­களில் பார்க்­கும் தைரி­ய­மான, துணிச்­ச­லான பெண்­ணாக நடித்­தி­ருப்­ப­தா­க­வும் துஷா­ரா­வின் நடிப்பு அனை­வ­ரை­யும் கவ­ரும் என்­றும் உத்­த­ர­வா­தம் அளிக்­கி­றார் ரஞ்­சித்.

"பிர­ப­ல­மான நடி­கர்­கள், பிர­ப­ல­மா­கப்­போகும் நடி­கர்­கள் என நிறைய பேர் இப்­ப­டத்­தில் நடித்­தி­ருக்­கி­றார்­கள்.

"பசு­பதி சார் ரங்­கன் வாத்­தி­யார் என்­கிற முக்­கி­ய­மான கதா­பாத்­தி­ரத்­தில் அருமையாக நடித்­தி­ருக்­கி­றார்.

"கலை­ய­ர­சன், ஜான் விஜய், சந்­தோஷ், அனு­பமா என மேலும் பலர் முக்கியமான வேடங்களில் தோன்று­கி­றார்­கள்.

"ஒளிப்­ப­தி­வா­ளர் முரளி சார், கலை இயக்­கு­நர் ராம­லிங்­கம், 'மெட்ராஸ்' படத்­தின்­போது துணை படத்­தொ­குப்­பா­ள­ராக இருந்து இப்­போது 'பரி­யே­றும் பெரு­மாள்', 'மூக்குத்தி அம்­மன்' எனப் பல படங்­களில் பணி­யாற்­றிய செல்வா உள்­ளிட்ட பலர் இணைந்­துள்­ள­னர்.

"இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல கதையையும் பல முக்கிய தகவல்களையும் கொண்டு சேர்த்த மனநிறைவு கிடைக்கும்," என்கிறார் பா.ரஞ்சித்.