ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கும் தீபிகா படுகோன்

ஏதென்ஸ் விமான நிலையத்தில் புன்னகைக்கும் தீபிகா படுகோன்

2 mins read
c5187dfc-01a9-4b12-8e0a-cac4a27292fc
ங்கள்: ஊடகம் -
multi-img1 of 2

'ஏதென்ஸ்' அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் தீபிகா படு­கோ­னின் சிலை வைக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­பல 'பாலி­வுட்' நடிகை தீபிகா படு­கோன். தமி­ழில் ரஜி­னி­யுடன் 'கோச்­ச­டை­யான்' படத்­தில் நடித்­தி­ருந்­தார். இந்தி நடி­கர் ரன்­வீர் சிங்கை காத­லித்து கடந்த சில ஆண்­டு­க­ளுக்கு முன் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

திரு­ம­ணத்­துக்­குப் பிற­கும் தொடர்ந்து நடித்து வரும் தீபிகா படு­கோன், சில மாதங்­க­ளுக்கு முன் போதைப்பொருள் வழக்­கில் போதைப் பொருள் தடுப்­புப் பிரிவு போலி­சார் முன் விசா­ர­ணைக்கு முன்னிலையானார். இது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி இருந்­தது. அவ­ரு­டன் சாரா அலி­கான், ஷ்ரத்தா கபூர், ரகுல் பிரீத் சிங் ஆகி­யோ­ரும் விசா­ரிக்­கப்­பட்­ட­னர்.

இந்­நி­லை­யில், கிரீஸ் நாட்­டில் உள்ள ஏதென்ஸ் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில், 'நிஜ­மான புன்­ன­கை­கள்' என்ற தலைப்­பில் கண்­காட்சி ஒன்று இடம் பெற்­றுள்­ளது.

கொரோனா பர­வல் கார­ண­மாக, வெளி­நாட்டுப் பய­ணி­க­ளுக்கு அனு­மதி மறுத்­தி­ருந்த அந்­நாட்டு அரசு, தற்­போது அனு­மதி அளித்­துள்­ளது. அதை­ய­டுத்து அங்கு கண்­காட்சி நடத்­தப்­ப­டு­கிறது. இதில் அமெ­ரிக்கா, ஆப்­ரிக்கா உட்­பட

உல­கின் பல்­வேறு நாட்டு பிர­ப­லங்­க­ளின் சிலை­களும் புகைப்­ப­டங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

இந்­தியா சார்­பாக, நடிகை தீபிகா படு­கோ­னின் மார்­ப­ளவுச் சிலை­யும் அந்த கண்­காட்­சி­யில் இடம்­பெற்­றுள்­ளது. கறுப்பு நிற மார்­பிள் கல்­லில் தீபி­கா­வின் முகம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. அதன் கீழ் 'பாலி­வுட் நடிகை, ஏதென்ஸ் விமான நிலை­யத்­தில் புன்­ன­கைக்­கி­றார்' என்று எழு­தப்­பட்­டுள்­ளது.

இதன் புகைப்­ப­டம் சமூக வலைத்­த­ளங்­களில் பரவி வரு­கிறது. பல­ரும் இந்­தப் படத்தை பகிர்ந்து வரு­கின்­ற­னர். பலர் அவ­ருக்கு வாழ்த்­து­களை தெரி­வித்து வரு­கின்­ற­னர். அண்மையில் தீபி­கா­வுக்கு லண்­ட­னில் உள்ள 'மேடம் டுஸாட்' அருங்­காட்­சி­ய­கத்­தில் மெழு­குச் சிலை வைக்­கப்­பட்­டி­ருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.