தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் ஜெய், தற்பொழுது இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்.
சுசீந்திரன் இயக்கத்தில் 'ஷிவ ஷிவா' என்ற படத்தில் நடித்திருக்கிறார் ஜெய். இவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் ஜெய். அதுபற்றி அவர் கூறுகையில், "சிறு வயதில் பல நாட்களை நான் ஒலிப்பதிவுக் கூடத்தில் கழித்திருக்கிறேன். 'அண்ணாமலை', 'பாட்ஷா' ஒலிப்பதிவின்போது நானும் அங்கு இருந்திருக்கிறேன்.
"இசையமைப்பாளராக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. எப்படியோ நடிகனாகிவிட்டேன். இந்த ஊரடங்கு நேரத்தில் இந்தப் படத்திற்கு இசை அமைக்க முடிந்தது. எனக்குள் இருந்த இசைக் கலைஞன் வெளியில் வந்தது குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன்," என்று கூறியுள்ளார்.

