பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கன்னடப் படமான 'கேஜிஎப்' தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் பிரஷாந்த் நீல் "எல்லா உணர்வும் நிறைந்த ஒரு முழுமையான படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளோம்.
ஒரு சிறந்த படக்குழுவுக்குத் தலை வணங்குகிறேன். சஞ்சய் தத் ஒரு நிஜ மாவீரர்.
பெரிய திரையில் 'கேஜிஎப் 2' படத்தை பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன்", என்று தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

